ArchiveMarch 2008

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.

நண்பர்களுக்கு வணக்கம். கடந்த ஆறு மாதகாலமாகக் ‘காணாமல் போயிருந்த’ என்னுடைய writerpara ஜிமெயில் முகவரி சற்றுமுன் எனக்குத் திரும்பக் கிடைத்திருக்கிறது. இந்த மின்னஞ்சல் முகவரியைச் சிலகாலம் எடுத்துக்கொண்டு விளையாடிய நண்பர்கள் அது குறித்து இணையத்தில் எழுதியிருந்ததைக் கண்டிருப்பீர்கள். அதன் தொடர்ச்சியாக மேற்கொண்ட சில நடவடிக்கைகளின் விளைவாக இப்போது இந்த முகவரி எனக்குத் திரும்பக்...

ம்ஹும்!

கி. ராஜநாராயணன் குறித்து புதுவை இளவேனில் தயரித்திருக்கும் ‘இடைசெவல்’ என்கிற டாக்குமெண்டரி படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. எழுத்தாளர் ஒருவரைப் பற்றி ஆவணப்படம் எடுப்பது எத்தனை சிரமமானது என்பது புரிந்தது. முன்பும் சில படங்கள் பார்த்திருக்கிறேன். அசோகமித்திரன் குறித்து அம்ஷன் குமார் எடுத்த படம். ஜெயகாந்தன் குறித்த படம். வைக்கம் முஹம்மத் பஷீர், ஓ.வி. விஜயன், யு.ஆர். அனந்த மூர்த்தி...

தீராப் பிரச்னைகள் [தொடர்ச்சி]

6. நான் இலக்கியவாதி இல்லை. குறிப்பாக, தமிழ் இலக்கியவாதி இல்லவே இல்லை. எழுதுபவன். அவ்வளவே. ஆனால் என் கனவுகளில் பெரும்பாலும் இலக்கிய அடிதடிக் காட்சிகள் மட்டுமே வருகின்றன. இத்தனைக்கும் நான் இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்வதே இல்லை. பக்கத்தில் எங்காவது நவீன இலக்கியக் கூட்டம் நடக்கிறது என்று தெரிந்தால் இருபத்தைந்து ரூபாய் ஏசி பஸ் பிடித்து இருபத்தைந்து கிலோ மீட்டர் தொலைவுக்கு ஓடிப்போய்விடுவேன். இது...

தீராப் பிரச்னைகள்

இந்தக் கட்டுரையில் இடம்பெறும் விஷயத்தைப் பற்றி நீங்கள் இரண்டுவிதமாக நினைக்கலாம். * இம்மாதிரியெல்லாமும் பிரச்னைகள் சாத்தியமா? * சே. இதெல்லாம் ஒரு பிரச்னையா? வெறுமனே புன்னகை செய்துவிட்டு நகர்ந்துவிடுவீர்களானால் நான் சொல்ல ஒன்றுமில்லை. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இனி ஒரு பாவப்பட்ட ஜென்மத்தின் பதினோரு பிரச்னைகள். என் வாழ்வில் நான் மிக அதிகம் அவதிப்படுவது இந்தப் பிரச்னைகளால்தான்...

பார்த்தசாரதிகளின் கதை [பாகம்3]

குமுதத்தில்தான் அவர் எனக்கு அறிமுகமானார். அனுமார் குங்குமம் என்கிற ஆரஞ்சு நிற குங்குமப் பொட்டும் தலையில் கட்டிய கர்ச்சிப்பும் கையில் ஹெல்மெட்டுமாக அரக்கபரக்க அலுவலகத்துக்குள் நுழையும் பார்த்தசாரதி. அறிமுகப்படுத்தியபோது, டாட்காம் இவருடைய பொறுப்பில்தான் வருகிறது என்று சொன்னார்கள். குமுதம் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் ஓய்வு பெறவேண்டிய சில கிழவர்களை மட்டும் வேலைக்கு வைத்துக்கொண்டு ஒண்டியாளாக அந்தப்...

பார்த்தசாரதிகளின் கதை [பாகம்2]

குமுதம் பதிப்பாளர் அமரர் பார்த்தசாரதியுடன் எனக்கு நேரடி அனுபவங்கள் மிகவும் குறைவு. மூன்றாண்டுகள் அந்த நிறுவனத்தில் பணியாற்றினாலும் அவருடனான என்னுடைய நினைவுகள் சொற்பமானவை. ஆனால் மிகவும் முக்கியமானவை. நான் குமுதத்துக்குச் சென்ற காலத்தில் அவர் அநேகமாகத் தன்னுடைய பொறுப்புகளிலிருந்து மெல்ல மெல்ல விலகத் தொடங்கியிருந்தார். மாலைமதி  [மாத நாவல்]  மட்டும் அப்போதும் அவரது கட்டுப்பாட்டில்தான் இருந்தது...

பார்த்தசாரதிகளின் கதை [பாகம்1]

எனக்கு மூன்று பார்த்தசாரதிகளைத் தெரியும். ஒருவர் என் தந்தை. ஒருவர் என் நண்பர். இன்னொருவரின் நிறுவனத்தில் சில காலம் வேலை பார்த்திருக்கிறேன். இம்மூன்று பார்த்தசாரதிகளிடமும்  என்னை வியப்பிலாழ்த்திய ஓர் ஒற்றுமை, மூவரும் மிகப்பெரிய பர்ஃபெக்‌ஷனிஸ்டுகள். ஒழுங்கீனத்தை வாழ்வின் ஆதாரகதியாகக் கொண்டு வாழ்கிறவன் என்றபடியால் இவர்கள் மூவர் மீதான என்னுடைய மதிப்பும் மரியாதையும் அளவிடற்கரியது. என் தந்தை பள்ளி...

காது, காதல், கடவுள்

எம்.வி. வெங்கட்ராம், தமது கடைசிக் காலத்தில் ‘காதுகள்’ என்று ஒரு நாவல் எழுதினார். ஒருவனுக்கு திடீரென்று காதுக்குள் வினோதமான சத்தங்கள் கேட்கும். சத்தம் இரைச்சலாகும். இரைச்சல் சமயத்தில் இசையாகவும், வேறு சமயத்தில் பயங்கரமான பிசாசுக்குரலாகவும் கூட ஒலிக்கும். வெங்கட்ராம், தம் காதுக்குள் கேட்ட குரலைத்தான் அந்நாவலில் எழுத்துவடிவில் பதிவு செய்து வைத்ததாகச் சொன்னார். காதுகள் நாவல் வெளியானபோது...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter


Exit mobile version