ArchiveMay 2009

ஆத்தா உன் கோயிலிலே!

திண்டுக்கல் அருகே சின்னாளப்பட்டியில் ஒரு கோடி ரூபாய் செலவில் தமிழுக்கு ஒரு கோயில் கட்டுகிறார்கள் என்று இன்றைக்கு ஒரு செய்தி படித்தேன். சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் சென்னை வெயிலில் இருபது கிலோமீட்டர் மூச்சிறைக்க ஓடவிட்டால் என்னவென்று தோன்றியது. கன்னித்தமிழுக்குக் கல்யாணம் செய்து வைத்து அன்னைத் தமிழாக்கி, அவள் பல  பிள்ளை குட்டிகள் பெற்றுப் போட்டு, கிட்டத்தட்ட ரிடையர் ஆகி வீட்டில் தொலைக்காட்சி...

இரண்டு முக்கிய அறிவிப்புகள்

1. நானும் நீங்களும் கற்பனை செய்யமுடியாத, எமது மனங்கள் ஒப்புக்கொள்ள முடியாத ஒரு நிகழ்வு நடந்தேறி விட்டது. எமது தலைவர் வீரமரணம் அடைந்துவிட்டார் என்பதனை நான் இங்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கின்றேன்.
– செல்வராஜா பத்மநாதன், GTVயில். [ஏன் தமிழ்நெட்டில் அறிவிக்கவில்லை என்று தெரியவில்லை]
2.  பழ. நெடுமாறன் அறிக்கை.
இது அபத்த அரசியல்களின் நேரம்.

முடிந்தது யுத்தம்; அடுத்தது என்ன?

மெஜாரிடி – மைனாரிடி, சிங்களர் – தமிழர் வேறுபாடு இனி இல்லை. தேசப்பற்றாளர்கள் – தேசத்துரோகிகள். தீர்ந்தது விஷயம்.   தமிழர்கள் இனி நிம்மதியாக வாழலாம். அச்சமில்லாமல் வாழலாம். அவர்களது சகவாழ்வுக்கு நான் பொறுப்பு. கடந்த செவ்வாய்க்கிழமை காலை இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் ராஜபக்‌ஷே ஆற்றிய உரையில் குறிப்பிட்டது இது. இலங்கை சுதந்தரம் அடைந்த நாளாக (அப்போது மாண்புமிகு அதிபருக்கு மூன்று...

தம்பி வெட்டோத்தி சுந்தரம்

‘நான் ஒரு பெரிய மேக்கர் சார்! முதல் படம் சரியா அமையாததுக்குப் பல காரணங்கள். இப்ப என்னை நிரூபிக்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கு. நீங்க எழுதுங்க. நான் எப்படி எடுக்கறேன்னு பாருங்க.’ அவருடைய தன்னம்பிக்கைதான் முதலில் என்னைக் கவர்ந்தது. நெற்றி நிறைய குங்குமம், விபூதி, சந்தனம், மணிக்கட்டில் கனமாக, மந்திரித்த சிவப்புக் கயிறு, மூச்சுக்கு மூச்சு சிவநாமம். சினிமாவைப் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டால் மட்டும்...

முடிந்தது

பிரபாகரனையும் தனி ஈழம் என்னும் கனவையும் இலங்கை ராணுவத்தினர் சுட்டுக்கொன்று விட்டார்கள். இதன்மூலம் 1983ம் ஆண்டு முதல் இடைவிடாது நடந்துவந்த இலங்கைத் தமிழ் மக்களின் ஆயுதமேந்திய விடுதலைப் போராட்டம் இறுதியாக முறியடிக்கப்பட்டிருக்கிறது. இந்த நூற்றாண்டில் தமிழர்களுக்கு இதனைக் காட்டிலும் மாபெரும் அதிர்ச்சி தரக்கூடிய சம்பவம் இன்னொன்று இருக்கப்போவதில்லை. ஓயாத யுத்தமும் தீராத ரத்தமுமாக வருடங்கள்...

இந்தியத் தேர்தல் 2009 – தமிழகம் என்ன சொல்கிறது?

* இன்று காலை வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததில் இருந்தே திமுக பெற்று வந்த முன்னணி நிலவரங்கள், பொதுவில் நிலவிய அதிருப்தி மனநிலைக்கு எதிரான முடிவு வரப்போகிறது என்பதைச் சுட்டிக்காட்டியது. * நாற்பது தொகுதிகளுக்கும் முடிவுகள் வந்துவிட்ட நிலையில் திமுக (18) கூட்டணி 28 இடங்களையும் அதிமுக(9) கூட்டணி பன்னிரண்டு இடங்களையும் பெற்றிருக்கின்றன. கடந்த தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற அபார வெற்றியுடன் இதனை ஒப்பிட...

தேர்தல் 2009 – என்ன சொல்கிறது?

* தேர்தல் முடிவுகள் பெரிய அதிர்ச்சிகளைத் தராமல் வந்துகொண்டிருக்கின்றன. * மத்தியில் ஆளும் காங்கிரஸ் திரும்பவும் ஆட்சியமைப்பது அநேகமாக உறுதியாகியிருக்கிறது. மீண்டும் மன்மோகன் சிங்கின் பெயரால் சோனியா ஆள்வார். *எதிர்பார்த்ததற்கு மாறாகத் தமிழகத்தில் திமுக கூட்டணி கணிசமான இடங்களில் முன்னணியில் இருக்கிறது. எதிர்பார்த்தபடியே அதிமுக கூட்டணி இந்தத் தேர்தலில் மூச்சு விட்டுக்கொள்கிறது. * ஈழப் பிரச்னையோ...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி