ArchiveFebruary 2010

மேற்கு வழியே கிழக்கு

சந்திரசேகரன் கிருஷ்ணனின் இந்தப் பதிவை வாசிக்கவும். கிழக்கு புத்தகங்களை சொந்தமாக வாங்கித்தான் படிக்க வேண்டுமென்பதில்லை. வாடகைக்கு எடுத்தும் வாசிக்கலாம் என்கிறார். நாநூறு சொற்களுக்குக் குறையாமல் ஒரு மதிப்புரை மட்டும் வேண்டுமென்கிறார். ‘வாடகைக்கு வாசிக்கலாம்’ என்று சொன்னாலும் வாடகைப் பணம் என்று ஏதும் வசூலிப்பதில்லை. இலவச நூலகம் மாதிரிதான். இப்போதைக்கு நாற்பது நூல்களை இந்தத்...

கலைஞரின் ‘ராங்’ செண்டிமெண்ட்

நேற்று காவிரிப் பூம்பட்டணம் என்கிற பூம்புகார் அருகே மேலையூர் சீனிவாசா மேல்நிலைப் பள்ளியின் ஆண்டுவிழாவுக்கு என்னை அழைத்திருந்தார்கள். காலைப் பொழுதில் கலந்துரையாடல். மாலை பரிசளிப்பு விழா என முழுநாள் நிகழ்ச்சி. என்னளவில் இது ஒரு புதிய அனுபவம். கூட்டங்களோ, கருத்தரங்குகளோ புதிதல்ல என்றாலும் ஒரு பள்ளிக்கூட ஆண்டு விழாவுக்குத் தலைமை தாங்குவது என்பது முதல். மூவாயிரத்தி ஐந்நூறு மாணவ மாணவிகளுக்கு எதிரே...

அண்ணன், அண்ணியை எப்படி அழைப்பார்?

நேற்று ஒரு வார இதழைப் புரட்டிக்கொண்டிருந்தேன். கேள்வி பதில் பகுதியில் வாசகரொருவர் கேட்டிருந்த கேள்வி: ‘அருமை அண்ணன் விஜய், அருமை அண்ணியாரை வீட்டில் எவ்வாறு அழைக்கிறார் என்று கண்டறிந்து சொல்ல முடியுமா?’ இதற்கு பதிலளிப்பவர், நடிகர் விஜய் குடும்பத்துக்கு நெருக்கமான இன்னொரு பத்திரிகையாளரிடம் இது பற்றி அக்கறையாக விசாரித்து, தகவல் பிழையில்லாமல் அருமையான பதில் ஒன்றைத் தந்திருந்தார். அது...

மதனசுந்தர ஜவ்வாது பாகவதர்

  அத்தியாவசியப பொருள்களின் விலைகள் நம்பமுடியாத உயரங்களை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், சென்னையில் வசிப்பவர்கள் ஒரு மாறுதலுக்கு அண்ணாசாலை காதி கிராமோத்யக் பவனை முயற்சி செய்து பார்க்கலாம். வெளிச் சந்தையில் எந்தப் பொருள் என்ன விலையாக இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். காதியில் அந்த விலையில் குறைந்தது பதினைந்து சதவீதமாவது குறைவாக உள்ளது. பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள், கடுகு...

காதலன், யுகேஜி-தேர்ட் க்ரூப்

'அப்பா, இந்த சீனிவாசன் ஏந்தான் இப்படி பண்றானோ தெரியல.’ ‘என்னடா கண்ணு பண்றான்?’ ‘இதுவரைக்கும் மூணுபேரை லவ் பண்ணிட்டான்.’ ‘யார் யாரு?’ ‘நித்யப்ரீதா, சம்யுக்தா, தீப்தி.’ ‘ஓ! பெரிய பிரச்னைதான்.’ ‘அவன் சம்யுக்தாவ லவ் பண்றது எனக்குப் பிடிக்கலை.’ ‘ஏண்டா செல்லம்?’ ‘அவ என் பெஸ்ட் ஃப்ரெண்ட்.’...

தில்லிக்குப் போன விண்வெளி வீரன்

தில்லி உலகப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றுவந்தேன். எனக்குத் தனிப்பட்ட முறையில், பணி சார்ந்து பேருதவியாக அமைந்த அனுபவம். எனினும் பொதுவில் பகிர்ந்துகொள்ளவும் சில விஷயங்கள் உண்டு. வந்ததுமே அதுபற்றி எழுத நினைத்தேன். ஆனால் முடியவில்லை. காரணம் கால்வலி. ஏற்கெனவே உடல்நலம் சரியில்லாத நிலையில்தான் தில்லிக்குச் சென்றேன். நல்ல மலேரியாவும் சுமாரான சிக்குன் குன்யாவும் இணைந்து வந்து சென்னை புத்தகக் கண்காட்சி...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி