தீவிரவாதத்தைவிட பயங்கரமானது ஏதாவது இருக்குமானால், அது சித்தாந்த நம்பிக்கைவாதிகளின் சினிமா விமரிசனங்கள்தான் என்று தோன்றுகிறது. முதல் நாளே பார்த்திருக்கவேண்டிய ராதாமோகனின் ‘பயணம்’ படத்தை ஒருவாரம் தள்ளி பார்க்கவேண்டிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது. இடைப்பட்ட தினங்களில் ஹரன் பிரசன்னாவும் மருதனும் இந்தப் படத்துக்கு எழுதிய விமரிசனங்களைப் படிக்க நேர்ந்ததால், படம் பார்க்கும் ஆவல் சற்று வடிந்திருந்தது என்பது...
கறை நல்லது.
இன்று காலை என் பழைய நண்பர் ஒருவரும் புதிய நண்பர் ஒருவரும் அரை மணி நேர இடைவெளியில் என்னைத் தொலைபேசியில் அழைத்தார்கள். இருவரும் தி.நகர் சிவா விஷ்ணு கோயில் எதிரே எல்.ஆர். சுவாமி மண்டபத்தில் நடைபெறும் கிழக்கு புத்தகத் திருவிழாவில் இருந்தே அழைத்திருந்தார்கள். வாங்கிய புத்தகங்களைப் பற்றிச் சொல்லிவிட்டு, முயற்சியைப் பாராட்டிவிட்டு கையோடு ஒரு கேள்வி கேட்டார்கள். அதெப்படி ஐந்து ரூபாய்க்கும் பதினைந்து...