ArchiveApril 2011

ஜெய் ஸ்ரீராம்!

சோவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால் துக்ளக்குக்கும் எனக்கும் சில ஜென்மாந்திரத் தொடர்புகள் உண்டு. தில்லி சுல்தான் துக்ளக். தன் வாழ்நாளில் அதிகபட்சம் மூன்று முறைக்குமேல் அவர் தலைநகரை மாற்றியதில்லை. ஆனாலும் ஏனோ அந்த ஜீவாத்மாவை நினைவுகூரும் போதெல்லாம் எப்பப்பார் முடிவுகளை மாற்றிக்கொண்டே இருக்கிறவர் என்று நமக்குத் தோன்றிவிடுகிறது. எல்லாம் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தின் சதி...

கொள்ளை கொள்ளும் பூமி

பண்பலை வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள், இணையம், மொபைல் அனைத்திலிருந்தும் நான்கு நாள்கள் விடுதலை பெற்று குடும்பத்துடன் கன்யாகுமரிக்குச் சென்றிருந்தேன். நானறிந்த உலகில் குமரியைக் காட்டிலும் மன எழுச்சியும் பரவசமும் அளிக்கக்கூடிய மண் வேறில்லை. கன்யாகுமரி என்னும் தென் முனையை ஒட்டிய சிறு நகரம் ஒரு பெரிய குப்பைத் தொட்டி. சென்னையைக் காட்டிலும் மோசமான பிராந்தியம் அது. அந்தச் சில கிலோ மீட்டர்கள்...

நீலக்காகம் 3

விறகுத் தொட்டிக்காரர், வீட்டை விட்டுக் கிளம்பும்போது காகம் கரைந்தது. ஒரு கணம் நின்றார். திரும்பி உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார். ‘இவளே, உன் தம்பி வாராப்புல இருக்கு. ஆழாக்கு அரிசி கூடப் போட்டு சமைச்சிரு’ விசாலாட்சி திரும்பிப் பார்த்துப் புன்னகை செய்தாள். காகம் கரையும்போதெல்லாம் தம்பி வருவது வழக்கமாகியிருக்கிறது. இன்று நேற்றல்ல. திருமணமான நாளிலிருந்து இது நடக்கிறது. தற்செயலா, திட்டமிடப்பட்டதா...

நீலக்காகம் 2

அவர் சோளிங்கரிலிருந்து வருவதாகச் சொன்னார். சாமி, மாடியில் இருக்கிறது என்று சீடன் கை காட்டினான். காட்டிய கரத்தில் ஒரு வெள்ளைத் துணி சுற்றியிருந்தது. இன்னொரு கையில் குழவிக் கல் மாதிரி ஒன்று வைத்திருந்தான். அதன் முனையில் மிளகாய்ப் பொடி இடித்த நிறத்தில் என்னவோ ஒட்டிக்கொண்டிருந்தது. முதல் கட்டுக் கதவு பாதி திறந்திருக்க, மூன்று பேர் உள்ளிருந்து எட்டிப் பார்த்தார்கள். வந்தவர் அவர்களைப் பாதி பார்த்தபடி...

நீலக்காகம் 1

ஒரு கொலை செய்யவேண்டும் என்று உத்தரவாகியிருந்தது. செல்லியம்மன் கோயில் பூசாரி சாமியாடி முடித்து, கற்பூரம் காட்டி, கன்னத்தில் போட்டுக்கொண்டு கூட்டம் கலைந்த பிற்பாடு ரங்கநாத ஆச்சாரி கங்காதரன் தோளைத் தட்டி சட்டைப் பைக்குள் துண்டுச் சீட்டை வைத்தார். ‘என்னாது?’ என்று சைகை காட்டியபடியே கேட்டான் கங்காதரன். ‘தெரியல. லெட்ரு. சாமி குடுக்க சொல்லிச்சி’ என்று சொல்லிவிட்டு குங்குமம் பட்டிருந்த பாதி தேங்காய்...

நிமித்தக்காரன்

கீழே உள்ள குறும்படத்தின் கதாசிரியர் ஸ்ரீதர் நாராயணன், தயாரிப்பாளர் + [திரை நிறையும்] ஹீரோ கணேஷ் சந்திரா, இயக்குநர் என மூவர் என்னுடைய நண்பர்கள். தமிழ்ப்புத்தாண்டு தினமான இன்று இப்படத்தை வெளியிட்டிருக்கும் என் நண்பர்களுக்கு வாழ்த்துகள். படத்தைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைத் தெரிவித்தால் என் நண்பர்களுக்கு உபயோகமாக இருக்கும். [திட்டுவதென்றாலும் திருப்தியாகத் திட்டித் தீர்க்கலாம்.] படத்தைப்...

ஓர் [அபாய] அறிவிப்பு

நாட்டில் இன்னும் கதை படிக்கிற நல்லவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள் என்று சரியாகத் தெரியவில்லை. தமிழ் சமூகம் தனது வாசிப்பு விருப்பத்தைக் கதையல்லாத எழுத்துப் பக்கம் திருப்பிக்கொண்டு பல காலமாகிவிட்டது என்பது என் கருத்து. இதைப் பலமுறை இந்தப் பக்கங்களில் குறிப்பிட்டும் இருக்கிறேன். புனைவு என்பது இப்போது பெரிய மற்றும் சிறிய திரைகளில் மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கிற...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி