* நெய்வேலி புத்தகக் கண்காட்சி [பொதுவாகவே எந்த ஊர் புத்தகக் கண்காட்சியும் வெள்ளிக்கிழமைகளில்தான் தொடங்கும். ஒரு சனி, ஞாயிறை முழுமையாகப் பயன்படுத்த அது ஒரு சௌகரியம்] ஒரு மாறுதலுக்கு இம்முறை சனிக்கிழமை மாலை தொடங்கியது. வண்ணமயமான வரவேற்பு வளைவு, அபாரமான அரங்க ஏற்பாடுகள், பிரமிப்பூட்டிய டாய்லெட் வசதி. என்.எல்.சி. மெனக்கெடுகிறது.
* பல சீனியர் பதிப்பகங்கள் இம்முறை கலந்துகொள்ளவில்லை. ஆனால் ப்ராக்ஸி அனுப்பியிருந்தார்கள். வேறு சில கடைகளில் அவர்களுடைய புத்தகங்கள் மட்டும். குறிப்பிட்டுச் சொல்லும் விதத்தில் முக்கியமான புதிய வரவுகள் என்று ஏதும் கண்ணில் படாவிட்டாலும் புத்தகப் பதிப்புத் தரத்தில் பலபேர் முன்னேற விருப்பம் கொண்டிருப்பதைக் காணவும் உணரவும் முடிந்தது. இது மகிழ்ச்சியளித்தது.
* இம்முறை டெல்லி அப்பளத்துக்கு அதிக கூட்டம் இல்லை. வெரைட்டியாக நிறைய ரோலர் கோஸ்டர்கள், டோராடோரா, ஜெயண்ட் வீல்கள் வந்திருந்தன. பெரியவர்களும் கோன் ஐஸ் சாப்பிட்டபடிக்கு மேலே ஏறி சந்தோஷமாகச் சுற்றினார்கள்.
* ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு பள்ளி – கல்லூரி மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது. ‘என் எதிர்காலக் கனவு’, ‘இந்தியா வல்லரசாக என்ன செய்யலாம்?’ என்கிற தலைப்புகளில் நெய்வேலி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மா
* நிகழ்ச்சியில் Prodigy குறித்த ஒரு விரிவான அறிமுகத்தை பத்ரி வழங்கினார். மிக அழகாக, நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்ட சொற்பொழிவு. மிகவும் ரசித்தேன். ஆனால் கொஞ்சம் நீளமாகிவிட்டது. பேசும்போதே எடிட் செய்வது எப்படி என்று அவரது சொற்பொழிவின் செகண்ட் ஹாஃப் முழுவதும் யோசித்துக்கொண்டிருந்தேன். ப்ராடிஜி புக் க்ளப் சார்பாக வெளியிடப்பட்ட ‘மேதை’ இதழை இந்த மேடையில் அறிமுகப்படுத்தினோம்.
* விழாவில் அவ்வப்போது வாழ்த்துரை வழங்கிய சில பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மிகவும் கவலைகொள்ள வைத்தார்கள். அவர்கள் சமூகம் இன்னும் தொட்டணைத்தூறும் மணற்கேணியை விட்டே எழுந்து வரவில்லை.
* மாலை கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட சோம. வள்ளியப்பனின் ‘உறுதி
* சத்யநாராயணன் என்றொரு குட்டிப் பையன் இரவு கீ போர்டில் கர்நாடக இசைக்கச்சேரி நிகழ்த்தினான். மிரட்டலாக இருந்தது. இன்னொரு Prodigy!
* அடுத்த ஞாயிறு வரை கண்காட்சி நடைபெறுகிறது.
அரங்கினுள் கிடைக்கும் அருமையான லெமன் டீக்காகவேனும் அவசியம் சென்று வாருங்கள்.
[தொடர்புள்ள முந்தைய பதிவு இங்கே.]