புனைவு எழுத்துப் பயிலரங்கம்

தக்‌ஷிணசித்ரா நிர்வாகத்தினர் நடத்தும் *Langfest2021* இன் ஒரு பகுதியாக, புதிதாகக் கதை எழுத வருவோருக்கு உதவும்படியாக ஒரு பயிலரங்கம் நடத்தித் தரக் கேட்டார்கள். மன்மதக் கலையெல்லாம் சொல்லிக் கொடுத்து வருவதா? ஆனால் தூண்டிவிட முடிகிறதா பார்க்கலாம்.

ஜனவரி 30ம் தேதி சனிக்கிழமை காலை 10.30 முதல் 12.30 வரை (9-10.30தான் ராகுகாலம்) zoomல் இது நடக்கிறது. கிருமி இல்லாதிருந்தால் தக்‌ஷிணசித்ராவிலேயே நடந்திருக்கும்.

எழுதுவது விளையாட்டல்ல என்பதால் ஒரு சிறிய நுழைவுக் கட்டணம் உண்டு. விவரங்களுக்கு langfest.dak@gmail.com என்னும் அவர்களது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

கவனம். இப்பயிலரங்கம் மிக நிச்சயமாகப் புதியவர்களுக்கு மட்டும்தான். எழுதிப் பழகியவர்கள் வரவேண்டாம். தக்‌ஷிணசித்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிற விவரங்களைப் பார்க்கலாம்.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter


Exit mobile version