வலை எழுத்து

கபடவேடதாரி – தர்ஷனா கார்த்திகேயன் மதிப்புரை (அத்தியாயம் 5)

முந்தைய அத்தியாயத்தில் சொல்லப்பட்ட கோவிந்தசாமியின் 40 ஆண்டு கால வரலாறும் இந்த அத்தியாயத்தில் சொல்லப்படுகின்ற அதற்கும் முந்திய அவனுடைய சில தலைமுறைகளின் வாழ்வும் வாசித்தபோது சிரிப்பை வரவழைத்ததற்கு அது எழுதப்பட்ட சுவாரசியமான மொழிநடை தான் காரணம். என்றாலும் அதில் சூசகமாக சொல்லப்படுகின்ற கண்மூடித்தனமான வாழ்க்கை போக்கினை நாம் புறந்தள்ள முடியாது. அடையாளச் சார்பு நிலை இல்லாத மனிதர்கள் யாருமே இருக்க...

கபடவேடதாரி – தர்ஷனா கார்த்திகேயன் மதிப்புரை (அத்தியாயம் 4)

தூக்கு மேடையில் ஏற்றப்பட்டு கயிற்றிலும் மாட்டப்பட்டு விட்ட ஒரு மரண தண்டனை கைதிக்கு யாருமே எதிர்பாராத விதத்தில் தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால், மனித வாழ்க்கைக்கு அதைவிட மிகப் பரபரப்பான ஒரு திருப்புமுனை வேறு எதுவும் இருக்க முடியாது. சூனிய வாழ்க்கையிலும் அப்படித்தான் போலும். தத்துவார்த்தமாக மிகவும் தீவிரமாக சென்று கொண்டிருந்த கதை சூனியன் நீல நகரத்தில் வந்து குதித்த பின்னர் சட்டென்று நகைச்சுவை...

கபடவேடதாரி – இந்துமதி என். சதீஷ் மதிப்புரை (அத்தியாயம் 1)

கதையை படித்தவுடன் “An Idle man’s mind is devil’s workshop” என்னும் பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. வெற்றிடத்தில்…. சோம்பேறிகளின் பாசறையில்…. சாத்தான் சுலபமாக இடம் கொள்ளும். சுயசிந்தனை இல்லாதவர்களை தன் விருப்பம்போல் ஆட்டுவிக்கும் .அத்தகு சாத்தான் எனப்படும் சூனியனைப் பற்றிய அறிமுகத்துடன் தொடங்குகிறது கதை. குழந்தை பருவத்தில் படித்த காமிக்ஸ் கதைகளை நினைவூட்டுகிறது...

கபடவேடதாரி – கவிதா. கே மதிப்புரை (அத்தியாயம் 5)

கோவிந்தசாமியின் தலையில் இறங்கிய சூனியன், அவன் வம்சத்தின் அருமை பெருமைகளையும், அவனது இல்லற வாழ்வின் இனிமையையும் விவரிப்பது தான் இந்த அத்தியாயத்தின் சுருக்கம். அத்தியாயத்தின் இறுதியில் கோவிந்தசாமி அவன் மனைவியுடன் இணைய சூனியன் உதவி செய்கிறார். சோறு காணாதவன் கையில் பிரியாணிப்பொதி கிடைத்தால் அது தான் கோவிந்தசாமியின் காதலும் அவன் மனைவி சாகரிகாவும். பெண்ணுக்குரிய இலக்கணத்தையெல்லாம் மீறியது சாகரிகாவின்...

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 4)

கதையின் மூன்றாவது அத்தியாயத்தின் இறுதியில்தான் அவன் அறிமுகமானான். அவன்தான் இந்தக் கதையின் கதாநாயகன் என அறிய முடிகிறது. அதற்கேற்றார் போல கதை மிகுபுனைவிலிருந்து விலகி யதார்த்த களத்திற்கு வந்து விட்டது. இந்தக்கதையில் இந்த அத்தியாயத்தில் வரும் கதைகளோ சம்பவங்களோ எதுவுமே கற்பனை இல்லை. அனைத்துமே உண்மைச் சம்பவங்கள் தாம். அதிலும் நாம் அன்றாட வாழ்வில் நேரடியாக பார்க்கிற மனிதர்களின் அனுபவங்கள். நாம்...

கபடவேடதாரி – கவிதா. கே மதிப்புரை (அத்தியாயம் 4)

எதிர்பார்க்கவே முடியாத திருப்பம். சூனியனைச் சுற்றி தான் கதை நகரும் என்று என்ணியிருந்த எனக்கு, இவ்வத்தியாயத்தின் இறுதி வாக்கியமெல்லாம் எதிர்பார்க்கவே முடியாததாய் இருந்தது. ஆனால் ஒன்று, அந்த நீல நகரம் பூமியின் ஒரு பகுதி தான். அது எப்படி புவியிலிருந்து பிரிந்து அண்ட வெளியில் அதிலிருக்கும் மனிதர்களுக்கு பாதகமில்லாமல் பயணிக்கிறது என்பதை சென்ற பதிவிலேயே கேட்டிருந்தோம். சரி, இந்த அத்தியாயத்தைப்...

தொற்று

முகக் கவசம் அணிந்தேன். ஆனாலும் கொரோனா பிடித்துக்கொண்டது. ஆம். நடக்கும். யாரையும் நெருங்கிப் பேசவில்லை. கை குலுக்கவில்லை. இருப்பினும் அது வந்தது. ஆம். வரும். தியேட்டருக்குப் போகவில்லை. மாலுக்குப் போகவில்லை. கும்பலில் சேரவில்லை. அவசர, அத்தியாவசிய வேலைகளுக்கு மட்டும்தான் வெளியே சென்றேன். இருப்பினும் பாதிக்கப்பட்டேன். சாத்தியம்தான். நாளெல்லாம் அலைந்து திரிந்து உழைக்கும் எத்தனையோ பேருடன் ஒப்பிட, என்...

கபடவேடதாரி – எஸ். சீனிவாச ராகவன் மதிப்புரை (அத்தியாயம் 4)

சூனியன் தப்பி விட்டான் என்ற பதட்டத்தை விட, சூனியன் ஒருவர் தலையிலேறி உள்நுழைந்தது ஒரு பதட்டம். அதை விட பதட்டம் அந்த நினைவிடுக்குகளில் புதைந்திருக்கும் சேதிகள். அம்மனிதன் பூமியில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களை போல் ஒருவனே,.. ஆனால்…. கோவிந்தசாமி என்ற அம்மனிதன் பிறப்பில் இருந்து அவன் திருமணம் வாரை வேகமான அறிமுகத்தை காண்கையில் கதை வேறு ஏதோ ஒரு திசையில் பயணிக்கும் என தோன்றுகிறது. சென்னையில் (என...

கபடவேடதாரி – தேவேந்திரன் ராமையன் மதிப்புரை (அத்தியாயம் 2)

சூனியக்காரன், தனது மரண தண்டனை நிறைவேற்றுவதற்காக நாடு கடத்தப்படுகிறான். அவன் பயணிக்கும் அந்த கப்பலானது எலும்புக்கூடுகளால் செய்யப்பட்டது. அந்த நிலையிலும் சூனியக்காரன் மார்தட்டி சொல்கிறான் உயிர் மரித்து போனால் எஞ்சுவது எலும்பு மட்டுமே ஆனால் அதுகூட எங்களுக்கு இல்லையென்பதால் நாங்கள் கடவுளையே மிஞ்சிவிட்டோம் என்கிற கர்வத்துடன் அந்த மிதக்கும் கப்பலில் பயணிக்கிறான். ஆனால் அவன் எந்த தருணத்திலும் தப்பிக்க...

கபடவேடதாரி – கவிதா. கே மதிப்புரை (அத்தியாயம் 3)

சென்ற அத்தியாயத்தில் நாயகனைக் காப்பாற்றவே அவனை மரண தண்டனைக்கு அழைத்துச் செல்லும் கப்பலைத் தகர்க்கும் வண்ணம் எங்கிருந்தோ கிளம்பியது ஒரு நீல நகரம். தோராயமாக அது பூமியைச் சேர்ந்ததாக இருக்கலாம். பூமியிலிருந்து பெயர்ந்த நகரம் தட்ப வெப்பம், கதிர்வீச்சு, ஈர்ப்புவிசை, வளிமண்டலம் அனைத்தையும் தாண்டி விண்வெளியில் எங்ஙனம் பிரவேசிக்க இயலும்? அதிலிருக்கும் மனிதர்களின் உடல் வெடித்துசிதறாமல் எப்படி இருக்க...

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!