ஜடாமுடிக்கு வழியில்லை!
பொதுவாக எனக்கு நகை அணிவது என்பது பிடிக்காது. பெண்கள் அணிவது, அவர்கள் பிறப்புரிமை. அது பற்றி இங்கே பேச்சில்லை. நகை அணியும் ஆண்களைப் பற்றியது இது.
மோதிரம், செயின், கம்மல், வளையல் எனப் பெண்களின் பிதுரார்ஜித உரிமைகளில் நான்கினை ஆண்கள் தமக்குமான ஆபரணங்களாக அபகரித்துக்கொண்டது பற்றி நிரம்ப வருத்தப்பட்டிருக்கிறேன். பால்ய வயதுகளில் நகையணியும் ஆண்களைப் பார்க்க நேர்ந்தால் குறைந்தபட்சம் நாலடியாவது தள்ளி நின்றுவிடுவேன். குறிப்பாக, ரயிலில் சீட்டுக்கு அடியே சூட்கேசை வைத்து இழுத்துக் கட்டும் இரும்புச் சங்கிலி கனத்துக்குக் கழுத்தில் செயின் அணிந்து நகர்வலம் வரும் நபர்களைக் கண்டால் எனக்குக் கிலி. அவர்கள் அன்னா ஹசாரே மாதிரி நல்லவர்களாகக் கூட இருப்பார்கள். அந்த வயதில் என் மனத்துக்குள் அங்ஙனம் தாட்டியான செயின் அணியும் ஆண்கள் அத்தனை பேரும் கெட்டவர்கள் என்னும் அபிப்பிராயம் எப்படியோ ஏற்பட்டிருந்தது.Read More »ஜடாமுடிக்கு வழியில்லை!