Tagநகைச்சுவை

பல்சரும் பால கணேஷும்

பால கணேஷ் என் நண்பர் என்பது இந்தப் பக்கத்தைப் பின் தொடரும் அத்தனை பேருக்கும் அநேகமாகத் தெரிந்திருக்கும். உடனடி நகைச்சுவைக்கு, சீண்டலுக்கு, கிண்டலுக்கு, உதாரணத்துக்கு – யோசிக்காமல், போன் செய்து ஒப்புதல் கேட்காமல் நம்மால் யார் பெயரைப் பயன்படுத்த முடியுமோ, அவரைத்தான் நண்பர் என்று சொல்ல முடியும். அவர் எனக்கு அந்த ரகம். பெரிய படிப்பாளி. நல்ல, வெகுஜன நகைச்சுவை எழுத்தாளர். கொஞ்சம் தீவிரம்...

அறுக்கமாட்டாதவன்

எழுதத் தொடங்கிய காலத்தில் பெரும்பாலும் நானொரு கைவலிய நவநீதனாகத்தான் இருப்பேன். என் அளவுக்கே குண்டான பேனாக்களைப் பிடிக்க முடியாமல் பிடித்துக்கொண்டு நான்கைந்து மணி நேரம் இடத்தை விட்டு நகராமல் அமர்ந்து எழுதிக்கொண்டிருப்பேன். வலி, விரல்களில் இருந்து முழங்கை வரை நீண்டு தொடும்போது சிறிது நேரம் ஓய்வு. பிறகு மீண்டும் எழுத ஆரம்பித்தால் தோள்பட்டை வலிக்கும்வரை எழுதுவேன். கைவலி உச்சம் தொடும்போது அது கழுத்து...

பார்த்தால் தீருமா பசி?

எனக்கு சமைக்கத்தான் வராதே தவிர, சாப்பிடும் கலையில் சந்தேகமின்றி வாகை சூடியவன். குவாலிடி கண்ட்ரோல் என்றொரு பணி இனத்தையே எவனோ என்னை ஒளிந்திருந்து பார்த்துத்தான் உருவாக்கியிருக்கிறான் என்ற ஐயம் எனக்குண்டு. சாதாரண சாம்பார், ரசமானாலும் ருசியில் அரை சிட்டிகை முன்னப்பின்ன இருந்தால் அந்தராத்மா அலாரம் அடித்துவிடும். இது வெறும் உப்பு-காரம் குறைபாடு சார்ந்தது மட்டுமல்ல. ஒரு ரசப்பாத்திரத்தைத் திறந்தால்...

பெண்ணிய விரோதக் கட்டுரை எழுதுவது எப்படி?

பொதுவாக ஆண்களுக்கு இது எளிதே என்றாலும் எழுதுவது என்னும் தொழிற்படும்போது அவர்கள் சிறிது எச்சரிக்கையாகிவிடுவார்கள். பொது புத்தி என்று பொதுவில் முன்வைக்கப்படும், காதல் சந்தியாவின் மூக்கு நிகர்த்த குற்றச்சாட்டுக்கு அஞ்சி, தம்மையொரு நடுநிலைவாதியாகக் காட்டிக்கொள்ளும் ஆயத்த உணர்வு ஆரம்பத்தில் ஏற்படும். ஆனால் அது தேவையற்றது. எப்படி என்பதைப் படிப்படியாகப் பார்க்கலாம். கட்டுரையின் முதல் பத்தியில் பெண்களின்...

சர்வநாச பட்டன் – 10

அதிகாரம் 10: உறவினர் 1. எனது ஸ்பாம் ஃபோல்டருக்கு ரிலேடிவ்ஸ் என்று பெயர் வைத்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் செலக்ட் ஆல், டெலீட் பொத்தானை அமுக்கும்போதெல்லாம் அப்படியொரு ஆனந்தப் பரவசம் உண்டாகிவிடுகிறது. 2. என் அனுமதி இன்றி என்னைச் சித்தப்பா, பெரியப்பா, மாமா, அண்ணன், தம்பி, மாப்ள, மச்சான், சகலை, தாத்தா, பேராண்டி என்றெல்லாம் அழைக்க எவன் எவனோ எவன் எவனையோ பெற்றுப் போட்டுவிட்டிருக்கிறான். இதெல்லாம் மனித...

சர்வநாச பட்டன் – 9

அதிகாரம் 9: விருது எழுதுவது ஒரு வேலை என்பது போல விருது வாங்குவது இன்னொரு வேலை. மிகச் சில எழுத்தாளர்களுக்கு மட்டுமே மல்ட்டி டாஸ்கிங் கைவருகிறது. பண முடிப்பு இல்லாத, சொப்பு சாமான் மட்டுமே கொண்ட விருதுகளை நிர்த்தாட்சண்யமாக நிராகரித்துவிடுகிறேன். ஐம்பது வயதுக்கு மேலே சொப்பு வைத்து விளையாடக் கூச்சமாக இருப்பதுதான் காரணம். நாற்பத்து நான்கு வயதில் நோபல் கொடுத்து ஆல்பர்ட் காம்யூவை பார்சல் பண்ணிவிட்டார்கள்...

சர்வநாச பட்டன் – 8

அதிகாரம் 8: நடைப் பயிற்சி 1. சகஸ்ரநாமமோ சஷ்டி கவசமோ கேட்டபடி காலை நடைப் பயிற்சிக்கு வருபவர்கள் இந்த உலகுக்கு ஒரு செய்தியை மறைமுகமாக அறிவிக்கிறார்கள். வீட்டில் அவர்களுக்கு நல்ல காப்பி கிடைப்பதில்லை என்பதே அது. 2. பெண்கள் முன்னேற்றத்துக்காக இதுவரை என்ன செய்து கிழித்திருக்கிறேன் என்று ஆவேசமாகக் கேட்டார் நண்பரொருவர். தினமும் நடைப்பயிற்சியின்போது என்னை அவர்கள் முந்திச் செல்ல விட்டு மகிழ்கிறேனே, போதாதா...

சர்வநாச பட்டன் – 7

அதிகாரம் 7: டீக்கடை நாலு பேர் டீ குடித்துக்கொண்டு நிற்கும் கடைக்குப் புதிதாக வருபவன் ‘ஒரு காப்பி’ என்று கேட்டால் ஆணவப் படுகொலை செய்யப் போவது போலப் பார்க்கிறார்கள். சுதாரித்துக்கொண்டு, ‘ஒரு வடை’ என்று கேட்டு வாங்கி அதைக் காப்பியில் முக்கி எடுத்துக் கடித்தால்தான் சமாதானமாகிறார்கள். டீயும் வடையும் தமிழர் உணவு. காப்பி நாம் தமிழர் உணவு. இரண்டு ரூபாய்க்கு விற்ற டீ, பன்னிரண்டு ரூபாய் ஆகிவிட்டாலும்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி