எழுதும்போது செய்யவே கூடாத தவறுகள் – வகுப்பு

மேற்கண்ட தலைப்பில் ஒருநாள் சிறப்பு வகுப்பு நாளை மறுநாள் ஞாயிறன்று (அக்டோபர் 12) நடக்கும் (zoom class). ஆர்வமுள்ளோர் நாளைக்குள் இணையலாம். பழைய மாணவர்கள், புதிய மாணவர்கள் அனைவருக்கும் இது பொது.

என்னுடைய வழக்கமான வகுப்புகள் நிறைய கதைகளுடன் நடக்கும். வந்தவர்களுக்கு இது தெரியும். இந்த வகுப்பு சற்று வேறு மாதிரி இருக்கும். கூடா 40 என்று ரைமிங்காகத் தலைப்பு வந்துவிட்டதே தவிர, எழுதிப் பார்க்கும்போது நாற்பதல்ல – அறுபது எழுபது தவறுகள் – எல்லாமே படுபயங்கரத் தவறுகளின் பட்டியலாக வருகிறது.

ஆனால் இது முக்கியம். தெரிந்துகொண்டே தீரவேண்டியது. வாழ்நாள் முழுதும் சலிக்காமல் எழுதியும் உரிய அங்கீகாரம் இல்லாமல் புழுங்கும் பலரை அறிவேன். மீள்வதற்கு ஒரே வழிதான். எழுதும்போது நம்மையறியாமல் செய்யும் பிழைகளைத் தெரிந்துகொண்டு களையப் பார்ப்பதே அறிவுடைமை.

கவனம். இது எழுத்துப்பிழை, இலக்கணப் பிழை களையச் சொல்லித்தரும் வகுப்பல்ல. எனக்கு அதற்கெல்லாம் பொறுமையும் இல்லை.

ஆர்வமுள்ளோர் வருக. விவரங்களுக்கு வாட்சப் எண்: 8610284208.


Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

By Para

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive new posts by email.

தொகுப்பு

Links

Join here

RSS Feeds

R.P. Sarathy

எழுத்துக் கல்வி