அக்டோபர் 8, 1971 இல் சென்னையில் பிறந்தார். அமுதசுரபி, கல்கி, குமுதம் இதழ்களில் பதினைந்து ஆண்டுகளும் பின்னர் பதிப்புத் துறையில் பத்தாண்டுகளும் பணியாற்றினார். பதினைந்து நாவல்கள் உள்பட எண்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன. தமிழில் அரசியல்-வரலாற்று நூல்களுக்கு மிகப்பெரிய வாசகப் பரப்பை உருவாக்கியவர். தமது படைப்பிலக்கியப் பங்களிப்புகளுக்காக பாரதிய பாஷா பரிஷத் விருது பெற்றவர். விரிவான குறிப்புக்கு இங்கே செல்க.
சிற்றில் (ஜனவரி 2026)
தொலைக்காட்சி நெடுந்தொடர் உலக அனுபவக் குறிப்புகள்
எழுத்து பிரசுரம் வெளியீடு.
திரைத்துறை சார்ந்து வெளியானவை போலத் தமிழில் சின்னத்திரை நெடுந்தொடர் உலகம் சார்ந்த புத்தகங்கள் வெளியானதில்லை. பா. ராகவனின் இந்த அனுபவக் குறிப்புகள் அவ்வகையில் ஒரு முதல் முயற்சி.
2004-2021 காலகட்டத்தில் பாரா இடைவெளியின்றி சின்னத்திரை நெடுந்தொடர்களுக்கு வசனம் எழுதி வந்திருக்கிறார். நூற்றுக்கணக்கான கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், முதலாளிகள், அதிகாரிகள், தொழிலாளிகளுடன் பழகக் கிடைத்த வாய்ப்பின் மூலம் தாம் பெற்றவற்றை இந்நூலில் விலகி நின்று அலசிப் பார்க்கிறார்.
அவ்வகையில் இந்நூல், ஓர் எழுத்தாளரின் சுய அனுபவங்களின் வழியாகக் கலை உலகின் ஒரு பிரிவின் – ஒரு காலகட்டத்தின் வரலாறாக விரிகிறது.
பா. ராகவனின் அனைத்துப் புத்தகங்களைக் குறித்த விவரங்களையும் இங்கிருந்து பெறலாம்.


