பாரா

அக்டோபர் 8, 1971 இல் சென்னையில் பிறந்தார். அமுதசுரபி, கல்கி, குமுதம் இதழ்களில் பதினைந்து ஆண்டுகளும் பின்னர் பதிப்புத் துறையில் பத்தாண்டுகளும் பணியாற்றினார். பதினைந்து நாவல்கள் உள்பட எண்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன. தமிழில் அரசியல்-வரலாற்று நூல்களுக்கு மிகப்பெரிய வாசகப் பரப்பை உருவாக்கியவர். தமது படைப்பிலக்கியப் பங்களிப்புகளுக்காக பாரதிய பாஷா பரிஷத் விருது பெற்றவர். விரிவான குறிப்புக்கு இங்கே செல்க.

புதிய புத்தகம்

சிற்றில் (ஜனவரி 2026)
தொலைக்காட்சி நெடுந்தொடர் உலக அனுபவக் குறிப்புகள்
எழுத்து பிரசுரம் வெளியீடு.

திரைத்துறை சார்ந்து வெளியானவை போலத் தமிழில் சின்னத்திரை நெடுந்தொடர் உலகம் சார்ந்த புத்தகங்கள் வெளியானதில்லை. பா. ராகவனின் இந்த அனுபவக் குறிப்புகள் அவ்வகையில் ஒரு முதல் முயற்சி.

2004-2021 காலகட்டத்தில் பாரா இடைவெளியின்றி சின்னத்திரை நெடுந்தொடர்களுக்கு வசனம் எழுதி வந்திருக்கிறார். நூற்றுக்கணக்கான கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், முதலாளிகள், அதிகாரிகள், தொழிலாளிகளுடன் பழகக் கிடைத்த வாய்ப்பின் மூலம் தாம் பெற்றவற்றை இந்நூலில் விலகி நின்று அலசிப் பார்க்கிறார்.

அவ்வகையில் இந்நூல், ஓர் எழுத்தாளரின் சுய அனுபவங்களின் வழியாகக் கலை உலகின் ஒரு பிரிவின் – ஒரு காலகட்டத்தின் வரலாறாக விரிகிறது.

பா. ராகவனின் அனைத்துப் புத்தகங்களைக் குறித்த விவரங்களையும் இங்கிருந்து பெறலாம்.

மெட்ராஸ் பேப்பர்
ஜூன் 1, 2022 அன்று தொடங்கப்பட்ட மெட்ராஸ் பேப்பர், தமிழில் வெளியாகும் சர்வதேச வார இதழ். இணைய இதழான இதில் உலகெங்கிலும் பரவி வசிக்கும் பா. ராகவனின் எழுத்துலக மாணவர்கள் எழுதுகிறார்கள். அரசியல், சமூகம், வரலாறு, மருத்துவம், அறிவியல், நுட்பம் தொடங்கி மெட்ராஸ் பேப்பர் அலசி ஆராயாத துறைகள் மிகக் குறைவு. கேளிக்கை மயமாகிவிட்ட தமிழ் இதழுலகில் ‘படித்து ரசிக்க’ மீதமிருக்கும் ஒரே வார இதழ் இதுவே. இது சந்தா செலுத்திப் (ஆண்டுச் சந்தா ரூ. 500 மட்டும்) படிக்க வேண்டிய இதழ். பா. ராகவன் இதன் ஆசிரியர். மெட்ராஸ் பேப்பர் இணையத்தளத்துக்கு இவ்வழியில் செல்க.
வாட்சப் சேனல்
இந்த இணையத்தளத்திலும் ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களிலும் எழுதிக்கொண்டிருந்த பாரா, செப்டெம்பர் 2023 இல் இந்த வாட்சப் சேனலைத் திறந்தார். அதன் பிறகு அவர் எழுதிய பல புத்தகங்களின் முதல் வடிவம் (First Draft) இங்கே எழுதியவைதாம். எழுத்தின் முதல் வடிவம் தொடங்கி, எழுதுபவனின் கூடவே பயணம் செய்ய விரும்பும் பிரத்தியேக வாசகர்களுக்காக மட்டுமே இயங்கும் சேனல் இது. முகவரி இங்கே.
எழுத்துப் பயிற்சி வகுப்பு
அக்டோபர் 2, 2020 முதல் பாரா ஆன்லைனில் எழுத்துப் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். எழுத்தார்வம் மிக்க புதியவர்களுக்கு எழுதக் கற்றுத்தரும் ஆன்லைன் பள்ளி இது. இந்த வகுப்பில் இணைந்து பயின்று தேறியவர்கள், மெட்ராஸ் பேப்பரில் தொடர்ச்சியாக எழுதுகிறார்கள். அவர்களுள் பலரது புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. விருதுகள் பெற்றிருக்கின்றன. பாராவின் மாணவர்கள் தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் தொடர்ச்சியாக எழுதுகிறார்கள். புதியதொரு எழுத்துத் தலைமுறை, Bukpet-WriteRoom வகுப்புகள் மூலம் அமைதியாக உருவாகி, அழுத்தமாகத் தடம் பதித்துக்கொண்டிருக்கிறது. வகுப்பு குறித்த விவரங்களை இந்தப் பக்கத்தில் பெறலாம்.
சொல்வெளி
இந்த இணையத்தளத்தில் முன்னர் எழுதியவற்றின் தொகுப்பு இங்கே உள்ளது.
தொடர்புக்கு
மின்னஞ்சல் முகவரி: writerpara@gmail.com

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive new posts by email.

தொகுப்பு

Links

Join here

RSS Feeds

R.P. Sarathy

எழுத்துக் கல்வி