ஒரு பிரார்த்தனை

நண்பர்களுக்குக் குடியரசு தின வாழ்த்துகள்.

பிரிவினை சக்திகளின் பிடியில் விழுந்துகொண்டிருக்கும் தமிழ் சமூகத்தின் ஒரு பகுதியினர்மீது பரிவும் பரிதாபமும் எழுகிறது. அவர்களைச் சிந்திக்கவிடாமல் போலி அறச்சீற்ற உணர்வால் தாக்கிக்கொண்டிருக்கும் வெற்றுக் கும்பலைக் காலம் களையெடுக்கும்.

இந்த தேசம் எனக்கு என்ன செய்தது என்று கேட்கிற சுதந்தரத்தைக்கூட இந்த தேசத்தின் ஜனநாயகம்தான் வழங்கியிருக்கிறது என்பதை நினைவுகூர்கிறேன்.

குறைகள் இல்லாமல் இல்லை. அவற்றின் மீதான வருத்தங்களும் கோபங்களும் இல்லாமலில்லை. அக்கோபம் தேசத்தின்மீதான நேசத்தின் வெளிப்பாடாக இருக்கவேண்டும். மகிழ்ச்சிக்குரிய ஒரு தினத்தைக் கறுப்பு தினமாக அறிவிப்பதும் பரப்புவதும் அருவருப்பான செயல். மிக நிச்சயமாக நான் அதனை வெறுக்கிறேன்.

மொழியை முன்வைத்துச் செய்யப்படும் மோசமான பிரிவினை அரசியலின் பிடியில் சிக்கிச் சீரழியாமல் இம்மண்ணைக் காக்க எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டுகிறேன்.

By Para

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive new posts by email.

தொகுப்பு

Links

Join here

RSS Feeds

R.P. Sarathy

எழுத்துக் கல்வி