Tagதிருமணம்

ஜென் கதை

அவளுக்கு அவனை மிகவும் பிடித்தது. பார்க்க நன்றாக இருந்தான். படித்தவனாக இருந்தான். தரமான உத்தியோகமும் தாராளமான வருமானமும் இருந்தது. தவிர வீட்டுத் தொல்லைகள், தொந்தரவுகள் இருக்காது என்று தோன்றியது. அவனது வீட்டாரும் தன்மையாகப் பழகினார்கள். பெண் பார்க்க வந்துவிட்டு அவளைப் பிடித்திருக்கிறது என்று அனைவரும் சொன்னார்கள். தனியே அவனோடு பேசியபோது தவறாக எதுவும் தோன்றவில்லை. அழகாகப் புன்னகை செய்தான். எல்லாம்...

ராம் 2 (கதை)

நாம் காதலிக்கலாம் என்று முதலில் சொன்னது அவள்தான். நம் காதலை முறித்துக் கொள்ளலாம் என்று இரண்டு வருடங்களுக்குப் பிறகு சொன்னதும் அவள்தான். முதலாவதை மகிழ்ச்சியுடனும் அடுத்ததை வேறு வழியில்லாமலும் அவன் ஏற்றுக்கொண்டான். மனித வாழ்வில் இரண்டு வருடங்கள் என்பது பெரிய கால அளவு இல்லைதான். ஆனாலும் அவனுக்கு அந்த இரண்டு வருடங்களும் நினைவுகூரும் போதெல்லாம் திருப்தி தரத் தக்கதாகவே இருந்தது. காதலில் அர்த்தபூர்வமான...

ஆவணி அவஸ்தைகள்

பாவப்பட்ட ஆனி, ஆடி மாதங்கள் முடிந்து, தாவணிகளுக்கு ப்ரமோஷன் கொடுக்கும் ஆவணிக்காலம் பிறந்தது முதல், நாளொரு கல்யாணம், பொழுதொரு ரிசப்ஷன். கல்யாண வயசில் எனக்கு இத்தனைபேர் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள் என்பதே இப்போதுதான் தெரியவருகிறது. கடந்த பத்துப் பதினைந்து நாள்களுக்கு மேலாக அதிதீவிரத் திருமணத் தாக்குதல்களால் என் அன்றாட நடவடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதற்குமுன் இப்படி தினமொரு...

Software மாப்பிள்ளை

இன்று காலை NHM Writer புகழ் நாகராஜனுக்கு சேலத்தைச் சேர்ந்த செல்வி. அஞ்சனாவுடன் திருமணம் நடந்தது. கடந்த ஒரு மாதகாலக் கடலைத் திருவிழாவை முடித்துக்கொண்டு வெற்றிகரமாக மணவாழ்வில் நுழைந்திருக்கும் நாகராஜனுக்கு வாழ்த்துகள். [சேலத்திலிருந்து புகைப்படம் அனுப்பியவர் பத்ரி]

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive new posts by email.

தொகுப்பு

Links

Recent Posts

Join here

RSS Feeds

R.P. Sarathy

எழுத்துக் கல்வி