திட்டமிட்டபடி என் சிறுகதைகளின் முழுத் தொகுப்பை இந்த ஆண்டு கொண்டுவர முடியவில்லை. அது எதிர்பார்க்கும் கடும் ஊழியத்தைக் கொடுக்கத் தற்சமயம் என்னால் இயலவில்லை என்பதே காரணம். அடுத்த வருடம் பார்க்கலாம், ஆண்டவன் சித்தம்.
எதிர்வரும் ஜனவரி சென்னை புத்தகக் கண்காட்சி சமயம் கீழ்க்கண்ட என் நூல்கள் வெளியாகின்றன.
1) சந்து வெளி நாகரிகம் – ட்விட்டர் குறுவரிகள் தொகுப்பு
2) இங்க்கி பிங்க்கி பாங்க்கி – கட்டுரைத் தொகுப்பு
3) கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – நீள்கதை
4) புவியிலோரிடம் (நாவல் – மறுபதிப்பு)
5) அலை உறங்கும் கடல் (நாவல் – மறுபதிப்பு)
இதுவே ஜாஸ்தி என்று தோன்றுகிறது. விழா ஏதும் வைக்கப் போவதில்லை என்பதால் யாரும் கலவரமடையத் தேவையில்லை.
மேற்கண்ட நூல்கள் அனைத்தையும் மதி நிலையம் வெளியிடுகிறது. தொடர்புக்கு : mathinilayambook@gmail.com அல்லது arpee71@gmail.com .
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.
RT @writerpara: இங்க்கி பிங்க்கி பாங்க்கி : http://t.co/Be97codM9t
இனிய வாழ்த்து(க்)கள்.