சென்னை புத்தகக் கண்காட்சி – சில விவரங்கள்

நாளை மறுநாள் வியாழக்கிழமை சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது. சில விவரங்கள்:

* அப்துல் கலாம், கண்காட்சியைத் தொடங்கிவைக்கிறார்.

* இடம், வழக்கமான பூந்தமல்லி நெடுஞ்சாலை, செயிண்ட் ஜார்ஜ் பள்ளி மைதானம்.

* மொத்த ஸ்டால்கள் 600. பரப்பளவு ஒரு லட்சத்து எழுபத்தையாயிரம் சதுர அடி.

* வருபவர்களுக்குத் தேவையான உணவு, பானங்கள் வசதிக்காக 5000 சதுர அடியில் தனி வளாகம்.

* இந்த வருட கருணாநிதி பொற்கிழி விருது [ரூபாய் ஒரு லட்சம்] பெறும் படைப்பாளிகள்: கவிஞர் சி. மணி, சிறுகதை ஆசிரியர் ஆர். சூடாமணி, கட்டுரையாளர் க. நெடுஞ்செழியன். பிற மொழி எழுத்தாளர்கள் வரிசையில் கன்னட நாடகாசிரியர் கிரிஷ் கர்னாட், ஆங்கிலத்தில் எழுதும் தமிழர் எஸ். முத்தையா.

* 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு நுழைவுக் கட்டணமில்லை. [நுழைவுக்கட்டணம் 5 ரூபாய்]

* வார நாட்களில் பகல் 2.30 மணி முதல் இரவு 8.30 வரை கண்காட்சி திறந்திருக்கும். விடுமுறை தினங்களில் காலை 11.30 முதல் இரவு 8.30 வரை.

* வழக்கம்போல் தினசரி கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் உண்டு. 17.01.2009 அன்று சிறப்பு விருந்தினராக வருபவர் சந்திரயான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை.

இந்த விவரங்கள் நேற்று பதிப்பாளர் சங்கத் தலைவரால் வெளியிடப்பட்டவை.

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

3 comments

By Para

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive new posts by email.

தொகுப்பு

Links

Recent Posts

Join here

RSS Feeds

R.P. Sarathy

எழுத்துக் கல்வி

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading