பாரா நடத்தும் ஆன்லைன் எழுத்துப் பயிற்சி வகுப்புகள் இந்த ஆண்டு பிப்ரவரி 14 அன்று ஆரம்பமாகின்றன. நுட்பம் அறிந்து எழுத விரும்புவோர் வரலாம்.
உரி – அடுத்த நாவல்
நாளை மறுநாள் தொடங்கும் இந்த எழுத்து வகுப்புகள், அநேகமாக இந்த ஆண்டில் நான் எடுக்கும் கடைசி வகுப்புகளாக இருக்கலாம். நாவலை ஆரம்பித்துவிட்டால் அதன் பிறகு அது முடியும் வரை வேறெதையும் செய்ய இயலாது என்பதே காரணம்.
உரைநடை இலக்கணம்
நாளை (மே 12) காலை பத்து மணிக்கு, சென்னை தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலக வளாக அரங்கில் நடைபெறும் கல்லூரி மாணவர்களுக்கான எழுத்துப் பயிற்சி முகாமில் கலந்துகொள்கிறேன். பதிநான்கு நாள்கள் நடைபெறும் இம்முகாமில் உரைநடைப் பிரிவில் முதல் வகுப்பினை நான் எடுக்கிறேன். சிறந்த உரைநடை எழுத்தின் அடிப்படை இலக்கணங்கள் என்பது எனக்குத் தரப்பட்டுள்ள கருப்பொருள்.
பிப்ரவரி 8 – எழுத்துப் பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்
எதிர்வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் எழுத்துப் பயிற்சி வகுப்புகளை மீண்டும் தொடங்குகிறேன். எழுத்தார்வமும் கற்கும் ஆர்வமும் உள்ள புதியவர்கள் வரலாம்.
வகுப்பு அனுபவம்
சமீப காலமாக என்னுடைய வகுப்புகளைக் குறித்து விசாரிக்கும் நண்பர்கள் அனைவரும் தவறாமல் ஒன்றைக் கேட்கிறார்கள். ‘இரண்டு மணி நேரம் உங்களால் தடையின்றிப் பேச முடிகிறதா?’ இவர்கள் அனைவரும் என் இயல்புகளை மிக நன்றாக அறிந்தவர்கள். குறிப்பாக மைக் முன்னால் பேசுவதில் எனக்குள்ள தயக்கங்களையும் அப்போது ஏற்படும் தடுமாற்றங்களையும் கண்டு களித்தவர்கள். சிறு வயதில் பல பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு...


