Categoryஅனுபவம்

என்றாவது ஒரு நாள்

வீடு வெதுவெதுப்பாக்கும் விழாக்கள்கூட முக்கியமில்லை. வீட்டைச் சுற்றிக்காட்டும் வீடியோ கலாசாரம் ஒன்று சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. நகரியில் ரோஜா கட்டியிருக்கும் வீட்டு விடியோ ஒன்றைப் பார்த்தேன். நேற்று என் அட்மின் இத்தகு விடியோக்கள் இன்னும் இரண்டினைச் சுட்டிக்காட்டினார். முதலாவது, தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் வீட்டுச் சுற்றுலா.  அவரது மகள் தயாரித்தது. மற்றது, பாண்டியன் ஸ்டோர் மீனா...

33 நாயன்மார்கள்

நான் வசிக்கும் சமஸ்தானத்தின் எல்லைக்குள் மொத்தம் 33 நாயன்மார்கள் வசிக்கிறார்கள். இவர்களுள் வீராசாமி நகர் மேநிலை நீர்த்தொட்டியைச் சுற்றி வசிப்போர் ஒன்பது பேர். சேம்பர்ஸ் காலனி மெயின் ரோடில் பன்னிரண்டு பேர். பிறருக்குக் குறிப்பிட்ட இருப்பிடம் கிடையாது. சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று இருப்பவர்கள். பிராந்தியத்தில் வசிப்பவர்கள் அத்தனை பேரும் வாகனதாரிகளாக வேண்டும், யாரும் கால்நடையாக எங்கும் சென்று...

குளிர்

பொதுவாக வேலை செய்ய அமரும்போது ஃபேன் போட மாட்டேன். ஏசிதான் எப்போதும். ஃபேன் சத்தம் அலர்ஜி. ஏசியிலும் சத்தம் உண்டென்றாலும் அந்தளவு மோசமில்லை. ஆனால் என் அலுவலகத்தில் ஏசி கிடையாது. எனவே ஃபேனை அணைத்துவிட்டு எழுதுவேன். எழுதாமல், யோசிக்கும்போது ஃபேன் போட்டுக்கொள்வேன். அதாவது குளிர்ச்சி, சூடு என்பது பொருட்டல்ல. சத்தம், சத்தமின்மையே பேசுபொருள். இப்படித்தான் சென்ற ஆண்டு வரை வாழ்ந்து வந்தேன். என்ன காரணமோ...

தனி

மிகவும் உள்ளடங்கிப் போய்க்கொண்டே இருக்கிறேன். சக மனிதர்களிடமிருந்து முற்றிலுமாகத் துண்டித்துக்கொண்டுவிடும் வேட்கை என்னையறியாமல் ஆட்கொண்டிருக்கிறது. எவ்வளவு காலமாக இது, ஏன் இது என்பதற்கான காரணம் தெரியும். ஆனாலும் என் இயல்புக்கு எதிரானதொரு பாதையில் தெரிந்தே நடந்துகொண்டிருக்கிறேன். இதை விரும்பிச் செய்கிறேனா என்று தெரியாது. ஆனால் செய்கிறேன். அதில் சந்தேகமில்லை. தற்செயலாக நேற்று என் மொபைல் போனில் யார்...

மெட்ராஸ் பேப்பர்

தொலைக்காட்சிக்கு எழுதுவதை நிறுத்தி எட்டு மாதங்கள் ஆகின்றன. இந்நாள்களில் நான் என்ன செய்கிறேன் என்று கேட்காத நண்பர்களே கிடையாது. எதையாவது செய்துகொண்டிருப்பேன் என்ற நம்பிக்கை மட்டும் எல்லோருக்கும் இருந்தது. அனைவருக்கும் சொல்வதற்கு ஒரு பதில் இருந்தாலும் அது உருத் திரண்டு ஒரு வடிவம் கொண்டு வெளிப்பட இவ்வளவு கால அவகாசம் தேவைப்பட்டது. நண்பர்களே, உங்கள் வாழ்த்தோடு ஒரு புதிய பத்திரிகை தொடங்குகிறேன்...

உன் மீது ஒரு புகார்

தன்னுடன் படித்த நண்பர்களில் பலர் புத்தக சகவாசமே இல்லாதிருப்பது குறித்து நண்பர் மகுடேசுவரன் எழுதிய ஒரு குறிப்பை ஃபேஸ்புக்கில் படித்தேன். நியாயமாக அவர் தம் நண்பர்களுக்க நன்றி சொல்ல வேண்டும். நேற்று ஒரு சம்பவம் நடந்தது. இரவு ஒரு தொலைபேசி அழைப்பு. அழைத்தது ஒரு பெண். எடுத்த எடுப்பில், ‘நீங்க பா. ராகவன்ங்களா? நான் மதுரவாயில் போலிஸ் ஸ்டேசன்லேருந்து பேசறேங்க. உங்க மேல ஒரு கம்ப்ளைண்ட் வந்திருக்கு. கொஞ்சம்...

காதலற்றவன்

இன்றெல்லாம் ஏராளமான காதல் குறிப்புகள், கவிதைகள், நினைவுச் சிதறல்கள் என்று சமூக வெளி எங்கும் ஊதுபத்திப் புகை போலக் காதல் மிதந்து ஊர்ந்துகொண்டே இருந்தது. தனக்கு வரும் மர்மப் பரிசுகளை மனுஷ்யபுத்திரன் தொடர்ந்து புகைப்படங்களாகவும் குறிப்புகளாகவும் தெரியப்படுத்திக்கொண்டே இருந்தார். தனக்கு யாரும் முத்தம் தரப்போவதில்லை என்று நிச்சயமாகத் தெரிந்தபடியால் மைலாப்பூர் ஜன்னல் கடையில் உருளைக் கிழங்கு பஜ்ஜி...

இறவான் – ஒலிப் புத்தகம்

இறவான் ஒலிப் புத்தகம் இன்று ஸ்டோரி டெல்லில் வெளியாகியிருக்கிறது. நண்பர்கள் கேட்டுப் பார்த்து உங்கள் கருத்துகளை எழுத வேண்டுகிறேன். தொடர்ந்து என்னுடைய பல புத்தகங்கள் ஸ்டோரி டெல்லில் ஒலி நூல்களாக வர இருக்கின்றன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இறவான் ஒலிப் புத்தகத்தைக் கேட்டு ரசிக்க இங்கே செல்லவும்.

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds

Follow Me