நாளை மாலை 6 மணிக்கு கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நிகழவிருக்கும் ‘பொன் மாலைப் பொழுது’ நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன். ‘எண்ணும் எழுத்து’ என்பது பொதுவான தலைப்பு. எனக்கு சொற்பொழிவாற்ற எப்போதும் விருப்பம் இருப்பதில்லை. சும்மா சிறிது நேரம் அறிமுக வார்த்தைகளாக ஐந்து நிமிடம் பேசிவிட்டு நிகழ்ச்சியைக் கலந்துரையாடலாக மாற்றிவிடலாம் என்று எண்ணியிருக்கிறேன். நான் 90களில்...
மயிலைத் திருவிழா படங்கள்
மயிலாப்பூர் ஃபெஸ்டிவல் நேற்று முதல் நடக்கிறது. நேற்று சில படங்கள் எடுத்தேன். சுமாராக வந்தவற்றுள் சில இங்கே.
ஞான் அவிடெ…
ஐ.எஸ்.ஆர்.ஓ. நம்பி நாராயணன் விவகாரம் உச்சத்தில் இருந்தபோது சென்றதுதான் கடைசி. பல வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் திருவனந்தபுரத்துக்குத் திரும்பச் செல்கிறேன். அதே குறைந்தபட்ச டிராஃபிக். அதே அழகான சூழ்நிலை. அதைவிட அழகான பெண்கள். செடிகள் காற்றில் அசைந்தாடுவதுபோல் அனைத்துப் பெண்களின் கூந்தலும் காற்றில் அலைபாய்கிறது. யாரும் பின்னல் போடுவதில்லை. இன்னும் உண்டு ரசிப்பதற்கு. ஆட்டோவில் குறைந்தபட்சக்...