இகவாழ்வில் ஒவ்வொருவருக்கும் விடை தெரியாத வினாக்கள் ஆயிரம் இருக்கும். எனக்கு உள்ளவற்றுள் முதன்மையான வினா, வேட்டி எப்படி இடுப்பில் நிற்கிறது என்பது.
கருவி(யி)ன் குற்றம்
இது என்னைப் போலவே உருண்டையானது. அசப்பில் ஒரு உருளைக்கிழங்கு போண்டாவைக் காதில் சொருகியது போல இருக்கும். காது துவாரங்களுக்குள் சொருகி எப்படிச் சுழற்றினாலும் இரண்டடி நடந்தால் கீழே விழுந்துவிடும். சுழற்றாமல் அப்படியே சொருகப் பார்த்தால் பாடாது.
பராமரிப்புக் கலை
மேக் ஒழுக்கம் என்பது மென்பொருள்களை எங்கிருந்து தரவிறக்கம் செய்கிறோம் என்பதில் தொடங்குகிறது. ஆப் ஸ்டோரில் இருந்துதான் எதையும் வாங்குவது என்பது என் கொள்கை. இலவச மென்பொருள்களானாலும் சரி; காசு கொடுத்து வாங்குவதானாலும் சரி. அதிகாரபூர்வக் கடையில் மட்டும் வாங்கினால் ஆபத்து கிடையாது.
உதயம்: சில நினைவுகள்
பிரபஞ்சன், செம்பூர் ஜெயராஜ், ஜோ ஜார்ஜ், க.சீ. சிவகுமார், ம.வே. சிவகுமார், கல்கியில் அடிக்கடி எழுதும் இதர பல எழுத்தாளர்கள் - யாரும் மிச்சமில்லை. எனக்காகவே யாரோ கட்டிவைத்த திறந்த வெளி ஆபீஸ் போலத்தான் அந்தத் திரையரங்கப் படிக்கட்டுகளைப் பயன்படுத்தி வந்தேன்.
டிஜிட்டல் உலகில் தமிழ் வாசிப்பு
இந்த மாதிரி பத்திக்குப் பத்தி சப் டைட்டில் போட்டு, பொருட்சுருக்கம் எல்லாம் சொல்லி, கடைசியில் உசாத்துணை கொடுத்து வாழ்நாளில் நான் எழுதியதே இல்லை. இது கவர்மெண்ட் சமாசாரம். வேறு வழியில்லாமல் போய்விட்டது.


