கொயந்த பாட்டு

நான் வசிக்கும் பேட்டையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் அவ்வப்போது ஏதேனும் ஒரு தலைப்புக் கொடுத்து, பிள்ளைகளைக் கவிதை எழுதி வரச் சொல்லிவிடுகிறார்கள். கவிதையெல்லாம் என்ன நாலாம் வாய்ப்பாடா எல்லோரும் உட்கார்ந்து எழுதிவிட? இது ஒருவித வன்கொடுமை என்பதை ஆசிரியப் பெருந்தகைகளுக்கு யாரெடுத்துச் சொல்வது?

நானெடுத்துச் சொல்லலாமென்றால் நேரமில்லை. எனவே ஆசிரியர்களைப் பழிவாங்க, பகுதிவாழ் பிள்ளைகளுக்கு நானே எழுதிக் கொடுக்கத் தொடங்கியிருக்கிறேன். ஆங்கிலத்தில் கேட்டால் ஆங்கிலம். தமிழில் கேட்டால் தமிழ். விரைவில் இந்த வன்முறைச் சேவையை ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்திலும் தொடங்க உத்தேசித்திருக்கிறேன். சாம்பிளுக்கு இரண்டு இங்கே.

ஆறாங்கிளாஸ் கொயந்த இலெவல்:

  • Water is the Wealth

The World is getting hotter
We always search for water
Each should preserve a magic bottle
To avoid the third world battle.

We invest in the gold
We harvest in the field
But the real wealth is Rain
Preserve it for the gain

Sea is always mighty
The water is almighty
Use with respect, keep it perfect
Make the life is beauty.

O

எட்டாங்கிளாஸ் கொயந்த இலெவல்:

பச்சைக் கிளியே பசும்புல்லே

பாயும் நதியே பெருங்கடலே

இச்சை கூட்டும் பூவினமே

ஈடில்லாத கானகமே

வட்டப்பொட்டே வெண்ணிலவே

வானம் நிறைத்த கருமுகிலே

கொட்டும் மழையே குளிர்தருவே

கோடி விண்மீன் கூட்டங்களே

கல்லே மண்ணே கனிவகையே

காவல் அரணே பெரும்புவியே

எல்லா உயிர்க்கும் சூரியனே

ஏற்றம் மிகுந்த எழிலவனே

கண்ணில் தெரியும் காட்சிகளே

கடவுள் படைப்பின் மாட்சிகளே

மண்ணில் சொர்க்கம் இவையெல்லாம்

மனிதன் ரசிக்க வைத்தானே.

Share

1 comment

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி