சுஜாதா கிழக்கில் உதிக்கிறார்

வாசகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. கிழக்கு பதிப்பகம், சுஜாதாவின் புத்தகங்களை வெளியிடவிருக்கிறது.

சுஜாதாவின் புத்தகங்களின் வரிசையில் முதலில் கீழ்க்கண்ட ஐந்து நூல்கள் வெளியாகின்றன.

* ஆஸ்டின் இல்லம்
* தீண்டும் இன்பம்
* நில்லுங்கள் ராஜாவே
* மீண்டும் ஜீனோ
* நிறமற்ற வானவில்

தமிழ் வாசகர்களின் பெருவரவேற்பைப் பெற்ற இந்த ஐந்து நாவல்களையும்  சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடுகிறோம்.

அவ்வண்ணமே ஜெயமோகனின் சில புத்தகங்களையும் கிழக்கு பதிப்பகம் வெளியிடுகிறது.

* இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்
* வாழ்விலே ஒருமுறை
* பனி மனிதன்
* நாவல் [கோட்பாடு]

சென்னை புத்தகக் கண்காட்சி நாளை மாலை தொடங்குகிறது. வாசகர்கள் அனைவரையும் கிழக்கு சார்பில் அன்புடன் அழைக்கிறேன். அடுத்த பத்து தினங்களைப் புத்தகக் கண்காட்சியில் கொண்டாடுவோம்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
 

Share

5 comments

  • பாவங்க… ஞாநி, சாரு எல்லோரும் கூட கெட்ட பதிப்பாளகிட்ட மாட்டி அவதிப்படறாங்கபோல… அவங்களையும் உய்வீங்களேன்!
     
    இன்னிக்கு கொழுத்தியாச்சு! :))

  • கிழக்கு  விட்டு வைத்துள்ளது திருவள்ளுவரையும் தொல்காப்பியரையும் மட்டும் தானா.

    • என்ன டாக்டர், எங்களுடைய திருக்குறள் உரை நீங்கள் பார்த்ததில்லையா? அவரையாவது விடுவதாவது?

  • Great !!!!!!!!! launch of new books, we (wallet ) are waiting for new arrivals
     
    With regards
    Puthaga pithan  

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி