Categoryகிழக்கு

சென்னை தினம் – சிறுகதைப் போட்டி

சென்னை தினத்தை ஒட்டி கிழக்கு பதிப்பகம் ஒரு சிறுகதைப் போட்டி அறிவித்துள்ளது. இது பற்றி ஹரன் பிரசன்னா அனுப்பிய விவரங்கள்:
O

கிழக்கில் பாரா; கிண்டிலில் கிழக்கு

நீண்ட நெடுநாள்களாக எதிபார்க்கப்பட்ட சங்கதி இது. பிராந்திய மொழி நூல்கள் கிண்டில் பதிப்பாக எப்போது வரும்? இப்போது வரத் தொடங்கிவிட்டது. நான் முன்பே குறிப்பிட்டிருந்ததுபோல என்னுடைய அனைத்துப் புத்தகங்களும் இனி கிழக்கு மூலம் வெளிவரும். ஜனவரி புத்தகக் காட்சியில் நீங்கள் என் புத்தகங்களின் புதிய பதிப்பைக் கிழக்கு அரங்கில் காணலாம். அவ்வண்ணமே, என் புத்தகங்களின் மின் நூல் வடிவம் இப்போது கிழக்கு வாயிலாகவே...

இரண்டாம் பாகம் முற்றும்

நண்பர்களுக்கு வணக்கம். செய்தியாக நான் சொல்லவேண்டியதை வதந்தியாகச் சிலர் முந்திக்கொண்டு வெளிப்படுத்திவிடத் துடிப்பதை ஒருபுறம் ரசித்தபடி இதனை எழுதத் தொடங்குகிறேன். மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. அவை இயல்பானவை, இயற்கையானவை. ஆம். கிழக்கில் நாளை முதல் நான் இல்லை. பரஸ்பர நட்புணர்வு, புரிந்துணர்வு எதற்கும் பங்கமின்றி, இன்று விலகினேன்.

மொட்டை மாடியில் ஞாநி

மார்ச் 31ம் தேதி – வியாழக்கிழமை அன்று மாலை 6.30க்கு மணி கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் ஞாநி பேசுகிறார். இன்றைய கூட்டணி நிலவரமும் அரசியல் நிலவரமும் தேர்தலைப் புறக்கணிப்பது சரியா? ஓ போடுவது எப்படி? வெளி மாநிலங்களில், வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் அங்கிருந்தே வாக்களிக்க முடியுமா? தேர்தலில் மீடியாவின் இன்றைய பங்கு என்ன? மேலும் பல விஷயங்கள் குறித்து ஞாநி உரையாடுகிறார். பின்னர் அவருடன்...

சிறுவர் எழுத்துப் பயிலரங்கம்

வரும் வெள்ளி-சனி [ஆக. 20,21] இரு தினங்களில் சிறுவர்களுக்காக எழுதுவது – பதிப்பிப்பது தொடர்பான பயிலரங்கம் ஒன்று புது தில்லியில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக நாளை புறப்படுகிறேன். சிறுவர்களுக்காக எழுதப்படும் புத்தகங்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதைவிட, எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்று இப்பயிலரங்கம் கற்றுத்தரும் என்கிறார்கள். காமிக்ஸ் மற்றும் கிராஃபிக் நாவல்களை உருவாக்குதல் பற்றிய...

மூன்று காப்பியங்கள்

தமிழின் தொன்மைக்குச் சான்றாக விளங்கும் இலக்கியங்களுள் ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகியவை மிக முக்கியமானவை. இந்த ஐந்து காப்பியங்களுள் வளையாபதியும் குண்டலகேசியும் இன்று நமக்கு முழுமையாகக் கிடைப்பதில்லை. இரண்டிலும் மிகச்சில பாடல்கள் மட்டுமே நமக்கு வாசிக்கக் கிடைக்கின்றன. கிடைக்கிற பாடல்களை வைத்து இந்தக் காப்பியங்கள் எதை, யாரைப் பற்றிப்...

என்ன ஊர்? சிங்கப்பூர்.

எதிர்வரும் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் [மே 15,16] சிங்கப்பூர் நேஷனல் புக் டெவலப்மெண்ட் கவுன்சில் ஏற்பாடு செய்திருக்கும் எடிட்டிங் தொடர்பான ஒரு பயிலரங்கை வழிநடத்தவிருக்கிறேன். என்னுடன் பத்ரியும் இணைந்து இதனைச் செய்கிறார். இதன் பொருட்டு நாங்கள் இருவரும் இவ்வார இறுதியில் சிங்கப்பூர் செல்கிறோம். சனி, ஞாயிறு, திங்கள் மூன்று தினங்கள் சிங்கப்பூரில் இருப்பேன். பகல் பொழுது முழுதும் பயிலரங்கில்...

சுஜாதா கிழக்கில் உதிக்கிறார்

வாசகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. கிழக்கு பதிப்பகம், சுஜாதாவின் புத்தகங்களை வெளியிடவிருக்கிறது. சுஜாதாவின் புத்தகங்களின் வரிசையில் முதலில் கீழ்க்கண்ட ஐந்து நூல்கள் வெளியாகின்றன. * ஆஸ்டின் இல்லம் * தீண்டும் இன்பம் * நில்லுங்கள் ராஜாவே * மீண்டும் ஜீனோ * நிறமற்ற வானவில் தமிழ் வாசகர்களின் பெருவரவேற்பைப் பெற்ற இந்த ஐந்து நாவல்களையும்  சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடுகிறோம். அவ்வண்ணமே...

ஒரு முக்கிய அறிவிப்பு

//அன்புள்ள பாரா! உங்களின் சில கட்டுரைகள் வாசித்தது, யூடுயூபில் நீங்கள் பேசியதன் தொடர்ச்சியாக கிழக்குக்கு புத்தகம் எழுத விருப்பம் தெரிவித்துச் ஓரிரு மாதம் முன்னால் உங்களுக்கு மின்னஞ்சல் எழுதியிருந்தேன். என்னைப்போலவே பலர் புத்தகம் எழுதுவது பற்றின அடிப்படைகளைக் கேட்டிருப்பதால் பின்னர் விளக்குவதாக சொன்னீர்கள். மீண்டும் நினைவுப் படுத்தியபோது, கடிதமாக எழுதுவதைவிட நேரில் பேசுவது பலனளிக்கும் என்று...

சிறுகதைப் பயிலரங்கம் – சில குறிப்புகள்

உரையாடல் அமைப்பின் சிறுகதைப் பயிலரங்கில் நேற்று கலந்துகொண்டேன். தமிழ்நாட்டில் சிறுகதை பயில நூறு பேர் பணம் கட்டி வரக்கூடியவர்கள் இருக்கிறார்கள் என்பது வியப்பல்ல; மகிழ்ச்சி. சில வருடங்களுக்கு முன்னர் தமிழோவியத்தில் புனைகதைகளின் எதிர்காலம் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். கதைகளில் இருந்து கதையல்லாத எழுத்தை நோக்கி நகர்வது பரிணாம வளர்ச்சி என்று அதில் குறிப்பிட்டிருந்தேன். கொஞ்சம் தீவிரமான சர்ச்சைகளை...

ஆஹா என்று சொல்லுங்கள்!

நாளை மறுநாள் 26.7.2009 தொடங்கி, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை 91.9 ஆஹா பண்பலை ரேடியோவில் [Aahaa FM-91.9] கிழக்கு பதிப்பகம் வழங்கும் ‘கிழக்கு பாட்காஸ்ட்’ என்னும் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. இது சினிமா நிகழ்ச்சியல்ல. ஒவ்வொரு வாரமும் உருப்படியான ஒரு விஷயம் தொடர்பான விரிவான கலந்துரையாடல் இதில் இடம்பெறும். கிழக்கு எழுத்தாளர்கள் பலர் பங்குபெறவிருக்கிறார்கள். முதல்...

இன்றுடன் இனிதே…

கிழக்கு மொட்டை மாடி புத்தக வெளியீடுகளின் இறுதிநாள் நிகழ்ச்சி இன்று நடந்தேறியது. சோம. வள்ளியப்பனின் ‘வாங்க பழகலாம்’ என்கிற இண்டர் பர்சனல் ரிலேஷன்ஷிப் குறித்த புத்தகமும் பாலு சத்யாவின் ஜார்ஜ் வாஷிங்டன் வாழ்க்கை வரலாறும் வெளியிடப்பட்டன. எஸ்.எல்.வி. மூர்த்தி, ஆர். வெங்கடேஷ் இருவர் வழங்கியதுமே நிறைவான உரைகள். நிகழ்ச்சியின் இறுதியில் வழக்கம்போல் கலந்துரையாடல்.  இதன் ஒலிவடிவம் இங்கே கிடைக்கும். இந்த ஆறு...

மொட்டை மாடி புத்தக அறிமுகம் 6

இன்று மொட்டை மாடி புத்தக அறிமுக நிகழ்ச்சிகளின் இறுதி நாள். சோம வள்ளியப்பனின் ‘வாங்க பழகலாம்’ மற்றும் பாலு சத்யா எழுதிய ‘ஜார்ஜ் வாஷிங்டன்’ இன்று வெளியிடப்படவிருக்கின்றன. வள்ளியப்பன் நூல் குறித்து எஸ்.எல்.வி. மூர்த்தியும் பாலுவின் புத்தகம் பற்றி ஆர். வெங்கடேஷும் பேசுகிறார்கள். நேற்றைய கூட்டம் மிகச் சிறப்பாக நடந்தது. ஏராளமான புதிய தகவல்களுடன் சுவாரசியமாகப் பேசிய ப்ரவாஹனின் பேச்சை நீங்கள் பத்ரியின்...

மொட்டை மாடி 4ம் நாள்

கிழக்கு மொட்டை மாடி புத்தக அறிமுக நிகழ்ச்சிகளின் நான்காம் நாளான இன்று இரா. முருகனின் ‘நெ.40 ரெட்டைத் தெரு’ நூலினை ஜே.எஸ். ராகவன் வெளியிட்டுப் பேசுகிறார்.
அறிவியல் எழுத்தாளர் ராமதுரையின் ‘விண்வெளி’ உள்ளிட்ட சில அறிவியல் நூல்களை பத்ரி சேஷாத்ரி அறிமுகம் செய்கிறார்.
அனைவரும் வருக.
நேற்றைய கூட்டம் குறித்த பிரசன்னாவின் பதிவு இங்கே.
பத்ரி எழுதிய சிறு குறிப்பு + ஒலிப்பதிவுத் தொகுப்புகள் இங்கே.

இன்று வெளியீடு: ஆயில் ரேகை, ஒபாமா

இன்று மாலை 6.00 மணிக்கு மொட்டை மாடி விழாவில் வெளியிடப்படவிருக்கும் புத்தகங்கள்: 1. ஆயில் ரேகை. 2. ஆர். முத்துக்குமாரின் ஒபாமா பராக். ஆயில் ரேகை, ரிப்போர்ட்டரில் நான் தொடராக எழுதியது. உலக அளவில் பெட்ரோலியப் பொருள்களின் விலை தாறுமாறாக ஏறிக்கொண்டிருந்த சமயம், எதனால் இது இப்படி என்று குழம்பித்தவிப்பவர்களுக்கு எளிமையாகப் புரியவைக்கும்படியாக எழுது என்று என் ஆசிரியர் இளங்கோவன் சொன்னார். தொடரை நான்...

கிழக்கு புத்தக அறிமுகக் கூட்டம் – 2

மொட்டை மாடி 2

நேற்றைய முதல் கூட்டம் பற்றிய விரிவான பதிவினை ஹரன் பிரசன்னா எழுதிவிட்டதால் நான் இங்கே எழுதவில்லை. அப்புறம் ஆபீஸ் போன பிறகு சில புகைப்படங்களை மட்டும் வெளியிடுகிறேன்.

சில புதிய புத்தகங்கள் – 3 [அறிமுகக் கூட்டம் – அழைப்பு]

நாளை மறுநாள் திங்கள் [22.12.2008] தொடங்கி ஒருவார காலம் கிழக்கு மொட்டை மாடிக் கூட்டம் தினசரி நடைபெறும். [27.12.2008 சனிக்கிழமை வரை.] இதில் தினசரி இரண்டு புதிய புத்தகங்களுக்கான வெளியீடு – அறிமுகம் நடைபெறவிருக்கிறது. திங்களன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும் இரு நூல்கள்: கேண்டீட் மற்றும் சூஃபி வழி. பத்ரியின் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ள வோல்ட்டேரின் கேண்டீட்...

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive new posts by email.

தொகுப்பு

Links

Recent Posts

Join here

RSS Feeds

R.P. Sarathy

எழுத்துக் கல்வி