சாந்தி முகூர்த்தம்

சில தினங்களுக்கு முன்பு ஆப்பிள் வெளியிட்ட புதிய இயங்குதளமான Yosemiteக்கும் நேற்றிரவு வெளியான iOS 8.1க்கும் என் பிரதியில் நல்லபடியாக சாந்தி முகூர்த்தம் நடத்தி வைத்தேன்.

ஓர் இயங்குத் தளம் இத்தனை வியப்பளிக்குமா, வசீகரிக்குமா என்று இன்னமும் நம்ப முடியவில்லை. இதற்குமேல் தொழில்நுட்பத்தில் என்ன இருந்துவிடப் போகிறது என்று சென்றமுறை தோன்றியது போலவேதான் இப்போதும் தோன்றியது.

இப்போது என் கருவிகளின் செயல்பாட்டு வேகம் அதிகரித்திருக்கிறது. ஒரு வினாடியில் wifi, மூன்று அல்லது நான்கு வினாடிகளில் hotspot தொடர்பு பெற முடிகிறது. கைப்பேசிக்கு வரும் smsகளை என் மாக்குப் புத்தகக் காற்றில் வேலை செய்துகொண்டிருக்கும்போது, அந்தத் திரையிலேயே பெற்று பதிலனுப்ப முடிகிறது. பேசியை வேறு அறையில் வைத்துவிட்டாலும் வேலை கெடாமல் மா.பு.காவிலிருந்தே அழைப்புகளை ஏற்று பதில் சொல்ல முடிகிறது. Notesல் கிறுக்கி அங்கிருந்தே சமூக வலைத்தளங்களுக்கு எதையும் அனுப்பலாம். பிறகு தேடித் தொகுக்கும் பணி இனியில்லை.

இந்தக் குறிப்பை Notesல்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். இங்கிருந்தே ஃபேஸ்புக்குக்கும் ட்விட்டருக்கும் எனது writerpara.com வலைத்தளத்துக்கும் தூக்கிப் போடுகிறேன். வந்து சேர்கிற வேகத்தைப் பாருங்கள்!
TUE 21 OCT 1:31 PM IST

Share

Add comment

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!