ஜனவரி 1, 2018 திங்கள் கிழமை அன்று மாலை 6 மணிக்கு டிஸ்கவரி புக் பேலஸில் [கேகே நகர், சென்னை] நடைபெறும் வாசகர் கலந்துரையாடலில் பங்குபெறுகிறேன். ருசியியல் என்பது பொதுவான தலைப்பு. இந்தத் தலைப்பில் என் புத்தகம் வெளிவருவது ஒரு காரணம் மட்டுமே.
நாம் என்ன வேண்டுமானாலும் பேசலாம், எது குறித்தும் விவாதிக்கலாம். நண்பர் வேடியப்பனின் ஆர்வமே இந்நிகழ்ச்சிக்கு முக்கியக் காரணம்.
வாசக நண்பர்களை இந்நிகழ்ச்சியில் பங்குபெற அன்போடு அழைக்கிறேன். புத்தாண்டு தினத்தன்று டிஸ்கவரி புக் பேலஸில் சந்திப்போம்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.