கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 35)

இந்த அத்தியாயம் கோவிந்தசாமி நீல வனத்தை வந்தடையும் பயணத்தில் தொடங்குகிறது. அவன் ஒரு குழுவுடன் சேர்ந்து பயணம் செய்கிறான், அதற்கான காரணமும் விளக்கப்படுகிறது. இதேபோல் திருமணமான புதிதில் அவன் திருப்பதி சென்று வந்த கதையும் வெகுசுவாரஸ்யமாக இருக்கிறது. நீல வனம் வந்து சேர்ந்த கோவிந்தசுவாமி முல்லைக் கொடியும் தமிழ் அழகியும் எதிர்கொள்கின்றனர். பலவந்தப்படுத்தி அவளுடன் சேர்கின்றனர்.
முதலில் வேண்டாம் வேண்டாம் விட்டுவிடுமாறு கெஞ்சிய கோவிந்தசாமி அவர்களின் தழுவலில் சிந்திக்கவே முடியாமல் தன்னை தொலைக்கிறான். இதையெல்லாம் அதுல்யா படம் பிடிக்கிறாள். படம் நன்றாக வந்ததை அறிந்ததும் அனைவரும் அவனை விட்டு விலகிச் செல்கின்றனர். அவனுக்கு இரவு ராணி மலர் கிடைத்தும் , இனி உபயோக படப் போவதில்லை.
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!
Share

Add comment

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!