05.01.2009 – திங்கள் [அதாவது நாளை] மாலை 6 மணிக்கு மாலனின் ‘என் ஜன்னலுக்கு வெளியே’ கட்டுரைத் தொகுப்பினை வெளியிடுகிறோம்.
நாங்கள் சில வருடங்களுக்கு முன்பு வெளியிட்ட மாலனின் ‘சொல்லாத சொல்’ கட்டுரைத் தொகுப்பின் தொடர்ச்சியாக இந்நூலைக் கொள்ளலாம். தமிழ் முரசு, புதிய பார்வை, உயிர்மை, தினமணி, இந்தியா டுடே ஆகிய இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள் இவை. பெரும்பாலும் அரசியல், சமூகம் மற்றும் இலக்கியம் சார்ந்த கட்டுரைகள்.
புத்தகத்தினை அறிமுகப்படுத்தி பத்திரிகையாளர் ஜென்ராம் பேசுகிறார். மாலன் ஏற்புரைக்குப் பிறகு கலந்துரையாடல் இடம்பெறும்.
இடம்? வழக்கம்போல் கிழக்கு மொட்டை மாடி. அனைவரும் வருக.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.