உரியைத் தொடங்கும் முன்னர் கைவசம் பத்து அத்தியாயங்களையாவது தயாராக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அன்றன்று எழுதுவதும் அதைக் கெடுப்பதற்கென்றே வருகிற கெட்ட சக்திகள் மீதான அச்சமும் கொடுமையானவை. யதியையோ, சலத்தையோ ஒருநாள்கூட நான் நிம்மதியாக எழுதிய நினைவில்லை. எப்போதும் பதற்றமும் கவலையும் இருக்கும். இம்முறை அந்தப் பதற்றம் இருக்கக்கூடாது; கைவசம் சில அத்தியாயங்களாவது எப்போதும் இருக்கும்படிப்...