Tagஎழுத்து பிரசுரம்

வாழ்வில் இல்லாததும் எழுத்தில் உள்ளதும்

எழுத்தில் நகைச்சுவை கூடுவதென்பது வாழ்க்கையை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதைப் பொறுத்தது. எதையும் விலகி நின்று பார்க்கப் பழகிவிட்டால் நகைச்சுவை தன்னியல்பாக வந்துவிடும். அதாவது, எழுதுபவன் தனிப்பட்ட முறையில் உணர்ச்சிவசப்படவே கூடாது. சிலருக்கு இது இயல்பாக அமையும். பழக்கத்தின் மூலமும் கொண்டு வரலாம். தரபேதம் இருக்கும் ஆனாலும் முழுப் பழுதாகாது. நகைச்சுவையை முதல் முதலில் Non Fiction இல்தான் முயற்சி...

மிருது – புதிய நாவல்

சலத்தின் உக்கிரம், ஆக்ரோஷம், தகிப்பு அனைத்திலிருந்தும் முற்றிலும் விலகி, தொட்ட இடமெல்லாம் வருடித்தரும் விதமாக இதனை எழுதினேன்.

கண்டெடுத்த வரிகள்

ஒரு நாவலை எழுதியவன் எதிர்கொள்ளும் வினாக்களுள் ஆகக் கொடூரமானது, இந்நாவல் எதைப்பற்றிப் பேசுகிறது? சுருக்கம் என்ன?

எல்லா நாவல்களுக்கும் இது வரத்தான் செய்கிறது. தவிர்க்க முடியாது. வாசிப்பு என்னும் செயல்பாடு ஒரு கிரகத்திலும் மக்கள் இன்னொரு கிரகத்திலும் வசிக்கும் வினோதமான தீபகற்பத்தில் நாம் வாழ்வதில் உள்ள சிக்கல் இது.

சலம் எதைப் பற்றிய நாவல்?

ரிக்வேதத்தில் சூத்திர குலத்தில் உதித்த கவசன் என்கிற ரிஷியின் பாடல் ஒன்று உண்டு. பல்லாயிரம் பாடல்களைக் (அல்லது மந்திரங்களை) கொண்ட வேதத்தில் பிராமணரல்லாத ஒரே ஒரு ரிஷியின் பாடல் என்றால், அதுதான்.

அபத்தங்களின் அபிநயம் – சி. சரவணகார்த்திகேயன்

துறைசார் அனுபவங்களில் புனைவேற்றி நாவல் எழுதும் வழக்கம் உலக இலக்கியத்தில் ஏற்கெனவே உண்டுதான். தமிழிலும் விவசாயம் முதல் தகவல் தொழில்நுட்பம் வரை பல துறை சார்ந்து நாவல்கள் வெளியாகி இருக்கின்றன. ‘ஜந்து’ நாவல் அவ்வகைமையில் முக்கியமான உதாரணமாக நிற்கும். நானறிந்து பாராவுக்கு நான்கு துறைகளில் நிறைய அனுபவம் இருக்கிறது. ஒன்று பத்திரிகை, அடுத்து பதிப்பகம், அப்புறம் தொலைக்காட்சி நெடுந்தொடர், சமீப காலமாக...

இந்த வருடம் ஏன் எதுவும் செய்யவில்லை?

ஆண்டுக்கு ஒரு நாவல், ஒரு பெரிய கேன்வாஸ் நான் ஃபிக்‌ஷன் என்பது என் ஒழுங்கீனங்களில் இருந்து என்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக நானே ஏற்படுத்திக்கொண்ட வழக்கம். சென்ற ஆண்டு அப்படியொன்றும் ஒழுங்கீனம் பொங்கிப் பெருகவில்லை ஆயினும் நாவலை முடிக்க முடியவில்லை. காரணம், வகுப்புகள்-மெட்ராஸ் பேப்பர்-புதிய எழுத்தாளர்களின் புத்தக முயற்சிகள். மாயவலை சீரிஸில் மிச்சமிருந்த புத்தகங்களின் மறு பதிப்புகளைக் கொண்டு வந்தேன்...

ஒரு A1B Positive சரித்திரம்

இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு மத்தியில் முதல் முதலில் தொலைக்காட்சித் தொடருக்கு எழுத ஆரம்பித்தேன். இரண்டாயிரத்து இருபது வரை இடைவெளியின்றி எழுதிக்கொண்டிருந்தேன். கிழக்கில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது மாலைப் பொழுதுகளுக்கு மட்டும் அந்த எழுத்து என்று இருந்தது. முழு நேரமான பின்பு இரவுகளில் மட்டும் இதர வேலைகளுக்கு வாய்ப்பு என்றானது. கசப்புக்கோ இனிப்புக்கோ அங்கே ஒன்றுமில்லை. அது ஒரு பணி. என் தனிப்பட்ட...

கையொப்பமுடன் புத்தகங்கள்

சென்னை புத்தகக் காட்சி 2022, கோவிட் தொற்றுப் பரவல் அதிகரிக்கும் காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. அநேகமாக மார்ச் மாதத்துக்குப் பிறகு அது நடக்கலாம் என்று இப்போதைக்குச் சொல்கிறார்கள். என்ன ஆகும் என்று கணிப்பதற்கில்லை. புத்தகக் காட்சி என்பது என்னைப் பொறுத்தவரை வாசகர்களையும் நண்பர்களையும் சந்திப்பதற்கான திருவிழா. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நான் என் கூட்டை விட்டு வெளியே வருகிறேன். பிற இலக்கியக்...

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive new posts by email.

தொகுப்பு

Links

Recent Posts

Join here

RSS Feeds

R.P. Sarathy

எழுத்துக் கல்வி