குங்குமத்தில் நான் எழுதிய இந்தத் தொடர், கிழக்கு பதிப்பகத்தில் நூலாக வெளிவந்தது. இப்போது அமேசான் கிண்டிலில் மின்நூலாகவும் வெளியாகியுள்ளது.
2016 ஜூன் மாதம் தொடங்கி இன்றுவரை எனது சௌக்கியத்துக்கு சகாயம் செய்துகொண்டிருப்பது பேலியோ. பேலியோ குழுவில் கற்றது, அப்பால், படித்து அறிந்தது அனைத்தையும் இந்நூலில் விவரித்திருக்கிறேன். பழைய என்னைப் போன்ற பூதாகாரமான ஆகிருதியாளர்கள், தற்போதைய என்னைப் போன்ற கவர்ச்சிகரமான ஆளுமையாக உருமாற நினைத்தால் இந்தப் புத்தகம் உதவும்.
இந்நூலுக்கு நண்பர் கோகுல் குமரன் அருமையானதொரு முன்னுரை எழுதியிருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.