இன்று காலை என் பழைய நண்பர் ஒருவரும் புதிய நண்பர் ஒருவரும் அரை மணி நேர இடைவெளியில் என்னைத் தொலைபேசியில் அழைத்தார்கள். இருவரும் தி.நகர் சிவா விஷ்ணு கோயில் எதிரே எல்.ஆர். சுவாமி மண்டபத்தில் நடைபெறும் கிழக்கு புத்தகத் திருவிழாவில் இருந்தே அழைத்திருந்தார்கள். வாங்கிய புத்தகங்களைப் பற்றிச் சொல்லிவிட்டு, முயற்சியைப் பாராட்டிவிட்டு கையோடு ஒரு கேள்வி கேட்டார்கள். அதெப்படி ஐந்து ரூபாய்க்கும் பதினைந்து...
இன்றே கடைசி
34வது சென்னை புத்தகக் கண்காட்சி வெற்றிகரமாக இன்று முடிவடைந்தது. கடந்த 13 நாள்களில் வராத கூட்டமெல்லாம் இன்று வந்துசேர, வளாகம் மகத்தான மக்கள் வெள்ளத்தில் அழகாகக் காட்சியளித்தது. என் இடைவிடாத 13 நாள் பிரார்த்தனைக்கும் பலனாக இன்று வாசல் ஈட்டிக்காரக் கூட்டத்துக்கும் மக்கள் அதிகம் செவி சாய்க்கவில்லை. காலை முதலே அனைத்துக் கடைகளிலும் நல்ல விற்பனை இருந்தது. இதுநாள் வரை தவற விட்டவர்களும்...
மகிழ்ச்சிப் பா.
ஆடுகளமும் ஆய்வுக்களமும்
கட்டுக்கடங்காத கூட்டத்தால் மூச்சுத்திணறல் ஏற்படும் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு இன்று புறப்பட்டேன். அயன், ஆதவன், ஆடுகளம், காவலன், கலைஞரின் இளைஞன், சாலமன் பாப்பையா, கு. ஞானசம்பந்தன் உள்ளிட்ட பெரும் படைதான் தடுத்து நிறுத்தியிருக்கவேண்டும். சுமாரான கூட்டம்தான். மாலை ஆறு மணிக்குப் பிறகு ஒரு பெரிய அலை அடிக்கத் தொடங்கியது. அதுவும் இரண்டு மணிநேரத்துக்குள்ளாகவே வடிந்துவிட்டது. இத்தனைக்கும் இன்று...
மீட்டருக்கு மேலே.
கடந்த இரு தினங்களாக, புத்தகக் கண்காட்சி வளாகத்தில் நான் சந்திக்கும் பெரும்பாலானவர்கள் முதலில் கேட்கும் கேள்வி: ‘கிழக்கு ஸ்டாலில் வைரமுத்து எப்படி?’ என் பதில், எனக்குத் தெரியாது என்பதுதான்! அதெல்லாம் சத்யா, பிரசன்னா டிபார்ட்மெண்ட். என் தொகுதி எல்லைக்கு அப்பாற்பட்ட விஷயம். இரு தினங்கள் முன்னர் நான் கண்காட்சிக்குச் சென்றபோது கிழக்கு அரங்கம் வாசலில் பெட்டி பெட்டியாகக் கொண்டுவந்து...
ஒரு ஞாநியும் மூன்று பானைகளும்
எதிர்பாராத சில காரணங்களால் இன்றைக்குக் கண்காட்சிக்கு மிகவும் தாமதமாகத்தான் செல்ல முடிந்தது. எல்லோரும் கூட்டம் இல்லை, இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தாலும் என் கண்ணுக்கு நியாயமான கூட்டம் இருந்ததாகவே தெரிந்தது. ஒரு வேலை நாளில் இதைவிட அதிகக் கூட்டம் இருப்பது சாத்தியமில்லை. வருகிற கூட்டத்தில் பாதியை வாசலிலேயே ஈட்டிக்காரர்கள் மாதிரி மடக்கி உட்கார வைக்கிற அராஜகத்தைப் பற்றி மட்டும் ஏன் யாரும் ஒன்றும்...
கவிதைக்கு வந்த கஷ்டகாலம்
ஒரு வழியாக பபாசி ஏற்பாடு செய்திருக்கும் ஜனதா க்ரெடிட் கார்ட் கவுண்ட்டர் இன்று இயங்க ஆரம்பித்துவிட்டதுபோல் தெரிந்தது. ஆனால் துரதிருஷ்டம், அதைப் பெரும்பாலானோர் பயன்படுத்த விரும்பவில்லை. க்ரெடிட் கார்டு என்ற போர்டும் கீழே ஒரு மிஷினும் இரண்டு பெண்களும் தனியாக அம்போவென்று உட்கார்ந்திருந்தார்கள். பல இடங்களில் கடைக்காரர்கள் இதைப் பொருட்படுத்த மறுக்கிறார்கள். காசு கொடு, புத்தகம் எடு. தீர்ந்தது விஷயம்...
ஒரு சாகசம்
ஒன்று. நேற்றே வெளியாகிவிட்டதாக நண்பர்கள் சொன்ன ரைட்டர்பேயோனின் திசை காட்டிப் பறவையை இன்று வாங்கினேன். ஆழியில் அதை வாங்கும்போது நண்பர் செந்தில், பேயோனின் இலக்கிய பார்ட்னரான லபக்குதாஸை அறிமுகப்படுத்தினார். பேயோனைப் பார்க்க வாய்ப்பில்லை என்பதால் லபக்குதாஸிடம் ஆட்டோகிராஃப் கேட்டேன். என்னைப் பற்றி இந்தப் புத்தகத்தில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதைப் பற்றிய காட்டமான விமரிசனத்தை ஆங்கிலத்தில் எழுதி...
புரட்சி படுத்தும் பாடு
நல்ல கூட்டம் நன்றி பத்ரி என்பது தவிர, ஒரு ஞாயிற்றுக்கிழமைக் கூட்டத்தைப் பற்றி வேறுவிதமாகக் குறிப்பிட ஒன்றுமில்லை. காலை கண்காட்சி தொடங்கிய முக்கால் மணி நேரத்தில் நான் திட்டமிட்டபடி சிறு பதிப்பாளர்களின் கடைகளை மட்டும் தேர்ந்தெடுத்துச் செல்லத் தொடங்கினேன். சிங்கிள், டபிள், ஃபோர் ஸ்டால்களால் நிறைந்த கண்காட்சியில் சிங்கிளாக நின்று ஆடுகிறவர்கள் இவர்கள். நேற்றுப் பிறந்தவர்களில் தொடங்கி பல...
இன்று சுஜாதா தினம்
பதிப்பாளர்களைப் பொறுத்தவரை இன்றுதான் நிஜமான புத்தகக் கண்காட்சித் தொடக்கம். நேற்றுவரை வராத மக்கள் அத்தனை பேரும் சேர்ந்து படையெடுத்துவிட்டார்கள். காலை முதலே நல்ல ஆள் நடமாட்டம் இருந்தது. மதியத்துக்குப் பிறகு கூட்டம் மெல்ல மெல்ல அதிகரித்து, மாலை நடக்கவும் முடியாத அளவுக்கு மக்கள் வெள்ளம். வெளியே வண்டி பார்க்கிங் பகுதியில் தகராறெல்லாம் நடந்ததாகக் கேள்விப்பட்டேன். கிழக்கு உள்பட இன்று எந்த அரங்கினுள்ளும்...
பால்கோவா தினம்
திருப்பதி லட்டு, திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி மக்ரூன், ஃபுட்டிங் கேக், தஞ்சாவூர் அசோகா, சந்திரகலா, கோயில்பட்டி கடலைமிட்டாய் வரிசையில் என் நெஞ்சையள்ளும் இனிப்புப் பண்டங்களுள் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு முக்கிய இடமுண்டு. மற்றவற்றையெல்லாம் எம்பெருமான் எப்படியாவது ஒரு சில மாதங்களுக்கு ஒருமுறையாவது யாரிடமேனும் எனக்காகக் கொடுத்து அனுப்பிவிடுவான். இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மட்டும்...
அறிவுஜீவி பயங்கரவாதம்
இன்றைய தினத்தை என் சொந்த விருப்பத்துக்குப் புத்தகங்கள் வாங்குவதற்கென்று ஒதுக்கிவிடலாம் என்று முடிவு செய்து முதல் வரிசையின் முதல் கடையிலிருந்து தொடங்கினேன். கண்ணில் பட்ட வரை அங்கே கூட்டம் குவியும் இடமாக தினத்தந்தி ஸ்டால் இருக்கிறது. ஒரே ஒரு புத்தகம். வரலாற்றுச் சுவடுகள். அடி பின்னியெடுக்கிறது. பெட்டி பெட்டியாக வெளியே எடுக்கிறார்கள், எடுத்த சூட்டில் காலியாகிவிடுகிறது. திரும்பவும் இன்னொரு பெட்டி...
நம்புங்கள்! நாவல் விற்கிறது!
மன்னார் அண்ட் கம்பெனி மாதிரி, செட்டியார் மெஸ் என்று என்னமோ பேர் போட்டு இன்று ஒருவழியாக கேண்டீன் தொடங்கிவிட்டார்கள். இட்லி, தோசை, பரோட்டா, போண்டா, பஜ்ஜி வகையறாக்களும் மினரல் வாட்டர் போத்தல்களும். ஃபுட் கோர்ட் மாதிரி செய்திருக்கலாம் என்று அந்த வாசல் மிதித்த அத்தனை பேரும் சொன்னதைக் கேட்க முடிந்தது. அப்துல் கலாம் கனவு கண்ட 2012ல் அதெல்லாம் நடைமுறைக்கு வந்துவிடும். இன்று அநேகமாக அனைத்துக் கடைகளிலும்...
சென்னை புத்தகக் காட்சி 2011 – முதல் நாள்
தமிழகத்தின் எதிர்காலமே, எழுச்சித் தளபதியே, ஆருயிரே, மன்னவரே என்று ஈகா தியேட்டரில் ஆரம்பித்து சாலையெங்கும் தட்டிகளைப் பார்த்தபோது முதலில் குழப்பமாக இருந்தது. பிறகு சந்தேகமாக. இன்விடேஷனில் ஸ்டாலின் பெயர் இல்லை. அப்புறம் எதற்கு இத்தனை வரவேற்புத் தட்டிகள் என்று புரியவில்லை. ஏதாவது திடீர் ஏற்பாடாக இருக்குமோ என்று நினைத்தேன். ஆனால் புத்தகக் காட்சி தொடங்கும் பள்ளி வளாகத்தைத் தாண்டியும் தட்டிகள்...
படம் காட்டுதல் 1
புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியப் பள்ளி மைதானத்தில் நாளை தொடங்கவிருக்கும் புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பகத்தின் அரங்கம் இது. F 13-14-15 எண். அரங்கில் இருந்து மொபைலில் படமெடுத்து, மொபைல் வழியாகவே பிரசன்னா அனுப்பியது இது. இன்னும் சில காட்சிகள் பின்னால் வரும்.
அனைவரும் வருக
சென்னை புத்தகக் காட்சி 2011 நாளை செவ்வாய்க்கிழமை [04.01.2011] மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது. எப்போதும் நடக்கும் அதே சேத்துப்பட்டு புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேநிலைப் பள்ளி மைதானம். பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே. இந்திய சட்ட ஆணையத்தின் முன்னாள் தலைவர் நீதிபதி அரு. லட்சுமணன் கண்காட்சியைத் தொடங்கிவைக்கிறார். கலைஞர் கருணநிதி பொற்கிழி விருதுகளை வழங்கிச் சிறப்புரை ஆற்றுபவர், மத்திய தகவல்...
சர்ச்சைக்குள் ஒரு சவாரி
2010ம் ஆண்டு இந்தியாவில் அதிகம் உச்சரிக்கப்பட்ட சொற்கள் மூன்று. ஸ்பெக்ட்ரம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆ. இராசா. ஒரு லட்சத்து எழுபத்தி ஐயாயிரம் கோடி என்கிற எண் இதன்மூலம் இந்திய சரித்திரத்தில் இடம் பிடித்துவிட்டது. நீரா ராடியா என்று தொடங்கி ராசாத்தி அம்மாளின் ஆடிட்டர் என்பது வரை இது தொடர்பான துணைக் கதாபாத்திரங்கள் வரிசைப்படுத்தப்பட்டு, குற்றச்சாட்டுகள், வழக்குகள், ஆவேசப் பேச்சுகள், ஆர்ப்பாட்டங்கள் என்று...
சாமியார்களின் ஏஜெண்டுகளைச் சமாளிப்பது எப்படி?
நீங்கள் சில புத்தகங்களை வாங்கவேண்டும் என்று குறித்துவைத்துக்கொண்டு புத்தகக் கண்காட்சிக்குச் செல்கிறீர்கள். எந்தப் புத்தகம், எந்த ஸ்டாலில் கிடைக்கும் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும். ஒரு பிரச்னையும் இல்லை. போனோமா, வாங்கினோமா, வந்தோமா என்று வேலையை முடிப்பது எளிது; இரண்டு மணிநேரத்தில் திரும்பிவிடுவேன் என்று வீட்டில் சொல்லிவிட்டுப் புறப்பட்டிருக்கிறீர்கள். ஆனாலும் அரை நாள், ஒருநாள் ஆகிவிடுகிறது...
லிங்கு சாமி!
ஒருவழியாக, இப்போது வரப்போகிற புதிய புத்தகங்களுக்கு என்னெச்செம் தளத்தில் லிங்க் போட்டுவிட்டாற்போலிருக்கிறது. நல்லவர்கள் நீடுவாழ்க. என்னுடைய இந்தாண்டுப் புத்தகங்களை என்.எச்.எம். தளத்தில் பார்வையிடவும் வாங்கவும் கீழ்க்கண்ட சுட்டிகள் உதவும். 1. ஆர்.எஸ்.எஸ் – மதம் மதம் மற்றும் மதம் 2. காஷ்மீர்: அரசியல்-ஆயுத வரலாறு 3. அலகிலா விளையாட்டு 4. கொசு 5. உணவின் வரலாறு 6. புகழோடு வாழுங்கள் என்னுடைய பிற...
பாவி, பழுவேட்டரையா! குறுக்கே வராதே!
ஊரில் யாருக்காவது கல்யாணமானால், காலக்ரமத்தில் ஒரு குழந்தை எதிர்பார்க்கலாம், நியாயம். தாலி கட்டி முடித்துவிட்டு நேரே போய் கம்ப்யூட்டரில் உட்கார்ந்து க்ளியோபாட்ராவின் வாழ்க்கை வரலாறை எழுதுகிற ஜென்மத்தை அறிவீர்களா? சென்ற வருடம் கிளுகிளு ராஜாக்களின் ஜிலுஜிலு வாழ்க்கையை எழுதி புத்தகக் கண்காட்சியைக் கலக்கிய முகில் இந்த வருடம் தருவது கிளியோபாட்ரா. எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவாணி என்கிற அற்புதமான...


