Categoryபுத்தகம்

எழுத்தாளரும் பதிப்பாளரும்

இந்நாள்களில் எழுத்தாளர்-பதிப்பாளர் உறவு ஒரு பேசுபொருளாகியிருக்கிறது. எழுத்தாளராகவோ பதிப்பாளராகவோ இல்லாதோரும் பேசுகிறார்கள். அக்கப்போர் என்றாகிவிட்டால் ஆளுக்கொரு தர்ம அடி போட்டுவிட்டுப் போய்விடுவது தேசிய குணமல்லவா? இருக்கட்டும். சிறிது வேறு மாதிரியான எழுத்தாளர்-பதிப்பாளர் உறவு குறித்து ஒரு தகவல் படிக்கக் கிடைத்தது. நல்லதையும்தான் பேசிப் பார்ப்போமே. அவர் ஒரு புலவர். ஆன்மிகம் சார்ந்து மட்டுமே...

மெட்ராஸ் பேப்பர் விழா

மெட்ராஸ் பேப்பர் வாசகர் திருவிழா – 13 நூல்கள் வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 11ம் தேதி புதன் கிழமை அன்று சென்னை கேகே நகர் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் சிறப்பாக நடந்தேறியது. விழாவினை நண்பர் கபிலன் (ஸ்ருதி டிவி) நேரலையில் கண்டு களிக்க வழி செய்தார். பெருந்திரளாகக் கூடிய வாசகர்களின் வாழ்த்து புதிய தெம்பையும் உற்சாகத்தையும் தந்தது. விழாவின் வீடியோக்கள் கீழே உள்ளன. விழாவில் எனது வரவேற்புரை...

வாவ் தமிழா பேட்டி

நடைபெறும் சென்னை புத்தகக் காட்சியை ஒட்டி, தமிழில் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்களைக் குறித்து வாவ் தமிழா யூ ட்யூப் சேனலுக்காக நண்பர் தளவாய் சுந்தரத்துக்கு ஒரு பேட்டியளித்தேன். கீழே அது இரண்டு பகுதிகளாகத் தரப்பட்டுள்ளது.

இந்த வருடம் ஏன் எதுவும் செய்யவில்லை?

ஆண்டுக்கு ஒரு நாவல், ஒரு பெரிய கேன்வாஸ் நான் ஃபிக்‌ஷன் என்பது என் ஒழுங்கீனங்களில் இருந்து என்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக நானே ஏற்படுத்திக்கொண்ட வழக்கம். சென்ற ஆண்டு அப்படியொன்றும் ஒழுங்கீனம் பொங்கிப் பெருகவில்லை ஆயினும் நாவலை முடிக்க முடியவில்லை. காரணம், வகுப்புகள்-மெட்ராஸ் பேப்பர்-புதிய எழுத்தாளர்களின் புத்தக முயற்சிகள். மாயவலை சீரிஸில் மிச்சமிருந்த புத்தகங்களின் மறு பதிப்புகளைக் கொண்டு வந்தேன்...

12+1 = 1

நீங்கள் இலக்கியம் என்று சொல்லுங்கள். இல்லை என்று மறுத்துப் பேசுங்கள். கவிதை என்று சொல்லுங்கள். சொற்குப்பை என்று தூக்கிக் கடாசுங்கள். வெறும் புலம்பல் என்று சான்றளியுங்கள். காவியச் சுவை கொண்ட கவிதைகள் என்று சிலிர்த்துக்கொள்ளுங்கள். எல்லாம் உங்கள் இஷ்டம். ஆனால் ஒன்றை ஒப்புக்கொண்டுதான் தீரவேண்டும். இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு வந்த தலைமுறைக்குத் (வாசிக்காதவர்களையும் சேர்த்தேதான் சொல்கிறேன்.)...

ஒரு A1B Positive சரித்திரம்

இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு மத்தியில் முதல் முதலில் தொலைக்காட்சித் தொடருக்கு எழுத ஆரம்பித்தேன். இரண்டாயிரத்து இருபது வரை இடைவெளியின்றி எழுதிக்கொண்டிருந்தேன். கிழக்கில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது மாலைப் பொழுதுகளுக்கு மட்டும் அந்த எழுத்து என்று இருந்தது. முழு நேரமான பின்பு இரவுகளில் மட்டும் இதர வேலைகளுக்கு வாய்ப்பு என்றானது. கசப்புக்கோ இனிப்புக்கோ அங்கே ஒன்றுமில்லை. அது ஒரு பணி. என் தனிப்பட்ட...

புதிய புத்தகங்கள்

இந்த ஆண்டு மூன்று புதிய புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. ஒன்று, உக்ரையீனா. மெட்ராஸ் பேப்பர் வார இதழில் வெளிவந்த உக்ரைனின் அரசியல் வரலாற்றுத் தொடர். அடுத்தது, தொடு வர்மம். குறுங்கட்டுரைகளின் தொகுப்பு. மூன்றாவது, வீட்டோடு மாப்பிள்ளை. உயிர்மை மாத இதழில் எழுதிய நகைச்சுவைப் புனைவு. உண்மையில், இந்த ஆண்டு நான் வைத்திருந்த திட்டங்கள் வேறு. மெட்ராஸ் பேப்பர் ஆரம்பித்ததில் இருந்து அனைத்துத் திட்டங்களையும்...

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!