என் தந்தை ஒரு தலைமையாசிரியர். அவரது பள்ளியில்தான் நான் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தேன். தலைமையாசிரியராகப்பட்டவர், பத்தாம் வகுப்புக்கு மட்டும் ஆங்கிலம் இரண்டாவது பேப்பர் எடுப்பார். பள்ளி வளாகத்தில் அவர் ஒரு பெரும் பூச்சாண்டியாக, பிரம்ம ராட்சசனாக அறியப்பட்டவர். ஹெட் மாஸ்டர் வகுப்பு என்றால் பிள்ளைகள் அலறுவார்கள். அடி, மிரட்டல், கடும் தண்டனைகளால் தன் ஆளுமையை அங்கு அவர் கட்டமைத்துக்கொண்டிருந்தார்.
எப்படி இருக்கலாம், கல்வி? 2
பாடப்புத்தகங்களின் அச்சமூட்டும் தன்மை குறித்து சென்ற பகுதியில் சொன்னேன். அதற்கு நிகரான இன்னொரு பிரச்னையாக நான் உணர்ந்தது, அவற்றின் முழுமையின்மை. பாடங்கள்தாம் என்றில்லை. புனைவு நீங்கலாக, எழுதப்படும் எந்த ஒரு விஷயமும் தான் சொல்ல வருவதை முழுமையாக வெளிப்படுத்தாத பட்சத்தில் அது ஓர் இறந்த பிரதியே என்பதில் எனக்குச் சற்றும் சந்தேகமில்லை.