வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள போலிஸ் ஸ்டேஷன் மாடியில் நேற்று மாலை தீப்பிடித்துக்கொண்டது. மொட்டை மாடியில் ஓலை வேய்ந்திருந்தபடியால் தீ மிக வேகமாகப் பரவி இரண்டு ஃபயர் எஞ்சின் வண்டிகள் வந்தபிறகுதான் ஓய்ந்தது.
மூணு
ஓடியே விட்டது ஒரு வருடம். சென்ற ஆண்டு ஜூலையில்தான் இனி முழுநேரமும் எழுத்து என்று முடிவு செய்தேன். குடும்பத்தினரின் அச்சம், நண்பர்களின் கவலை, நண்பர்கள்போல் இருந்தவர்களின் நமுட்டுச் சிரிப்பு அனைத்தையும் பதில் கருத்தின்றி வாங்கி வைத்துக்கொண்டு என் முடிவு இதுதான் என்று என் மனைவியிடம் சொன்னேன். சரி என்பதற்கு மேல் அவள் வேறேதும் சொல்லவில்லை. நான் சினிமாவில் கவனம் செலுத்துவேன் என்று அவள் நினைத்தாள்...