Categoryயதி

யதி – வாசகர் பார்வை 11 [காஞ்சி ரகுராம்]

அடேய் கிராதகா! உன் யதியைப் படிக்க, மூச்சுப் பயிற்சியெல்லாம் செய்ய வேண்டுமா? இதயம் அதிகமாய்ப் படபடத்தது. சமயத்தில் சில துடிப்புகள் சில நொடிகளுக்கு நின்று மீண்டன. படித்து முடித்த போது புயல் தாண்டவமாடிக் கடந்த நிலமாய் என் மனம். நிசப்தத்தில் செவி. வானை வெறித்தபடி விழிகள். இன்னும் சில நாட்களுக்கு யதிலிருந்து மீள முடியாது என்று நினைக்கிறேன். இது வீட்டை விட்டு விலகி துறவு பூண்ட நான்கு சகோதரர்களின் கதை...

யதி – வாசகர் பார்வை 10 [முருகு தமிழ் அறிவன்]

சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் கிழக்கிலிருந்து விலகுகிறேன் என்று பாரா அறிவித்த நேரத்தில் அதைப் பற்றி விசனப்பட்ட அவரது வாசகர்களில் நானும் ஒருவன். நேர்த்தியான கதைசொல்லியும், சமூகத்திற்குத் தேவையான சிந்தனைகளையும் அனுபவங்களையும் சொல்லும் வல்லமை கொண்டவரும் மொழியாளுனருமான எந்த ஒரு எழுத்தாளர் அவ்வாறு அறிவித்தாலும் வாசகப் புலத்தில் சலசலப்பும், விசனமும் ஏற்படுவது இயல்பு; அவ்வாறு விலகி, ஓரிரு மாதங்களில்...

யதி – வாசகர் பார்வை 9 [ரஞ்சனி பாசு]

நாம் அனைவரும் இப்பூவுலகில் பயணிகளே.. பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே நிகழும் பயணம் ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது. ஒரே இலக்கை அடைவதற்கு அவரவருக்கான வழித்தடம் வேறு.. ஒரே பாதையில் பயணித்தாலும், அவரவர் இலக்குகள் வேறு.. ஆனாலும் எல்லோரும் பயணப்பட வேண்டும். ஒருவரின் பயண அனுபவம் போல் பிறிதொன்று இல்லை என்ற பிரத்யேகத் தனித்தன்மை தான் மனித வாழ்வின் சுவாரஸ்யம். யதி யை வாசிக்க தூண்டியதே –துறவறம் எனும்...

யதி – வாசகர் பார்வை 8 [டாக்டர் வாசுதேவன்]

பாராவின் யதியை ஆரம்பத்தில் இருந்து படித்து வந்தேன். கொஞ்சம் ஆன்மிக நாட்டம் இருந்ததால், இது பத்தி என்ன எழுதப்போகிறார் என்று ஒரு ஆவல் இருந்தது. நிறைய விஷயங்கள் புதிதாகத் தெரியவந்தன. ஆரம்ப காலத்தில ட்விட்டர்ல இவர் போட்ட லிங்கை தேடிப்போய் தினமணி இணைய பதிப்பில் படிச்சு ஆஹா, ஓஹோ, அப்பறம் போன்ற கருத்தாழமிக்க கமெண்ட்ஸ் போட்டுக்கொண்டு இருந்தேன். அப்பறம் கதை உள்ள இழுத்து, கமெண்ட் போடுவதை நிறுத்திட்டேன்...

யதி – வாசகர் பார்வை 7 [ஜானகி கிருஷ்ணன்]

முதலில் அம்மா பாத்திரம் ரொம்பப் பாவமாக இருந்தது.   “நான் உன் போட்டோவை வச்சுப்பேன்” ன்னு சொன்ன  கடைக் குட்டி செல்லப் பையன் எங்கிருந்தோ போன் பண்ணி   “நான் இனி உனக்கு இல்லை – நீ சாக மாட்டே”ந்னு சொன்ன பொழுது  எனக்கு வருத்தமாக இருந்தது.  குழந்தைகளுக்கு பார்த்துப் பார்த்துச் செய்த தாய்மார்களுக்குத் தெரியும் அது எவ்வளவு கஷ்டம்னு.  என் சினேகிதி ஒருமுறை என்னிடம் மகன் மிகவும் கடுமையாகத் தன்னிடம் பேசுவதாகச்...

யதி – வாசகர் பார்வை 6 [மீனாட்சிசுந்தரம் வைத்தியநாதன்]

நான் முதல் முதலில் வாசித்த பாராவின் நாவல், அலகிலா விளையாட்டு. அப்போது எனக்கு அவருடைய முகம் தெரியாது. இந்த நாவலாசிரியருக்குக் குறைந்தது 60-70 வயது இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் பாரா அப்போது இளைஞர். இது தெரிந்தபோது வியப்பாக இருந்தது. தனது முப்பதுகளில் உள்ள ஒருவர் இப்படியொரு கதையை எழுத முடியுமா, யோசிக்கத்தான் முடியுமா என்று அப்போது நினைத்தேன். பிறகு அவருடைய புவியிலோரிடம் வாசித்தபோது...

யதி – வாசகர் பார்வை 5 [B. சுதாகர்]

என்னால் நம்பவே முடியவில்லை. நானா இப்படி? விளையாட்டாக ஓரிரு அத்தியாயங்கள் படிக்க ஆரம்பித்து, அதிலேயே மூழ்குகிற வகையில் யதியில் என்னை இழந்தது எப்படி? துறவின் மீது அனைவருக்கும் பொதுவான எதிர்ப்புணர்வும் வியப்புணர்வும் இருக்கும். வாழ வழியின்றி, வாழ்க்கையை எதிர்கொள்ள திராணியின்றி துறவை நாடிச் செல்கின்றனர் என்று நினைப்போர் பலர். கெளதம புத்தரைக் கூடக் குறை சொல்வோர் உண்டு. ஆனால் துறவென்பது ஒரு மனிதனின் மன...

யதி – வாசகர் பார்வை 4 [பிவிஆர்]

யதி வாசித்து முடித்தேன். எங்கே முடித்தேன், அதை விட்டு இன்னும் வெளியே வராமல் அல்லவா கிடக்கிறேன்! சன்னியாசிகளை வியந்துகொண்டும், பிசாசுகளை பயந்துகொண்டும், உறவுச் சிக்கல்களில் உழன்றுகொண்டும், வாழ்வின் பெரும் பகுதியை இழந்துவிடும் அவலத்தில் இருந்து, மிகப்பலரையும் மீட்டெடுக்கும் அருமையான கருவியாகவே பா.ராகவன் எழுதிய யதி எனக்குத் தென்படுகிறது. அம்மாவின் அன்பும் அரவணைப்பும், வீடு தரும் பாதுகாப்பும்...

யதி – வாசகர் பார்வை 3 [லங்காபதி சிறிதரன்]

அன்பின் ராகவன், யதி வாசித்து முடித்தேன். அற்புதம் என்கின்ற சொல்லைத் தவிர வேறு பொருத்தமான சொற்கள் எதையேனும் இடமுடியும் எனத் தோன்றவில்லை. விமல் என்கின்ற ஒற்றைப் பாத்திரத்தின் தன்மையில் நின்றுகொண்டு விஜய், வினய், வினோத், அம்மா, கேசவன் மாமா, பத்மா மாமி, சித்ரா, சொரிமுத்து போன்ற பல்வேறு பாத்திரங்களுக்கூடாக சுவாரசியம் குறையாமல் கதையினை நகர்த்திச் சென்ற விதம் ஆகா போட வைக்கின்றது. ஒரு தாயின் நான்கு...

யதி – வாசகர் பார்வை 2 [எஸ். ஶ்ரீனிவாச ராகவன்]

நம் நாட்டில் சாமியார்கள் பலர் உண்டு. பரதேசி முதல் ராஜகுரு வரை… மக்கள் மனங்களை எத்தனை விதமாகப் பிரிக்க முடியுமோ, அத்தனை விதமான சாமியார்களும் உண்டு. ஆனால் வெகுஜனங்களின் மனத்தில் சாமியார் பற்றிய பிம்பம் ஒரே மாதிரி தான். அவர்  உணவு விருப்பம் துறந்தவராக இருக்க வேண்டும். பகட்டு துறந்தவராக இருக்க வேண்டும். சைவ பட்சிணியாக இருக்க வேண்டும். முக்கியமாக அவர் காமம் துறந்தவராக இருக்க வேண்டும். அத்தனை...

யதி – வாசகர் பார்வை 1 [உஷாந்தி கௌதமன்]

யதியின் முதலாவது அத்தியாயத்தில் ஒரு புதரைப் பற்றிய வர்ணனை வரும். ஒரு புதரில் வேறு வேறு செடிகள் எங்ஙனம் கிளைகளின் அடர்த்தியில் கூட சரியாகப் பிரிந்து இணைந்து ஒரே மரம் போல உருவாகியிருக்கும் என்று. இந்தக் கதையில் வருபவர்களும் அப்படித்தான். யாருக்குமே ஒருவரோடு ஒருவர் தொடர்பில்லை. ஆனாலும் ஒன்றே போல ஒரு நூற்பின்னல் கொண்டு இணைக்கப்பட்டிருப்பார்கள். மொத்தக் கதையும் நான்காவது சகோதரனான விமலின்...

யதி – புதிய நாவல்

யதியை எழுதத் தொடங்குகிறேன்.  2009ல் என் அப்பாவின் புத்தகச் சேமிப்பை ஒரு நாள் அளைந்துகொண்டிருந்தபோது ஜாபால உபநிடதம் என்ற பழம்பிரதியொன்று கண்ணில் பட்டது. அது எத்தனை காலப் பழசு என்றுகூடத் தெரியவில்லை. முதல் சில பக்கங்கள் இல்லாமல், பழுப்பேறி, செல்லரித்து, தொட்டால் உதிரும் தருவாயில் இருந்தது அந்நூல். அப்பா வேதாந்த நாட்டம் கொண்டவரல்லர். அப்படியொரு பிரதியை அவர் தேடி அடைந்திருக்க முடியாது. யாரோ...

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive new posts by email.

தொகுப்பு

Links

Recent Posts

Join here

RSS Feeds

R.P. Sarathy

எழுத்துக் கல்வி