யதி வாசித்து முடித்தேன். எங்கே முடித்தேன், அதை விட்டு இன்னும் வெளியே வராமல் அல்லவா கிடக்கிறேன்! சன்னியாசிகளை வியந்துகொண்டும், பிசாசுகளை பயந்துகொண்டும், உறவுச் சிக்கல்களில் உழன்றுகொண்டும், வாழ்வின் பெரும் பகுதியை இழந்துவிடும் அவலத்தில் இருந்து, மிகப்பலரையும் மீட்டெடுக்கும் அருமையான கருவியாகவே பா.ராகவன் எழுதிய யதி எனக்குத் தென்படுகிறது. அம்மாவின் அன்பும் அரவணைப்பும், வீடு தரும் பாதுகாப்பும்...
யதி – வாசகர் பார்வை 3 [லங்காபதி சிறிதரன்]
அன்பின் ராகவன், யதி வாசித்து முடித்தேன். அற்புதம் என்கின்ற சொல்லைத் தவிர வேறு பொருத்தமான சொற்கள் எதையேனும் இடமுடியும் எனத் தோன்றவில்லை. விமல் என்கின்ற ஒற்றைப் பாத்திரத்தின் தன்மையில் நின்றுகொண்டு விஜய், வினய், வினோத், அம்மா, கேசவன் மாமா, பத்மா மாமி, சித்ரா, சொரிமுத்து போன்ற பல்வேறு பாத்திரங்களுக்கூடாக சுவாரசியம் குறையாமல் கதையினை நகர்த்திச் சென்ற விதம் ஆகா போட வைக்கின்றது. ஒரு தாயின் நான்கு...
யதி – வாசகர் பார்வை 2 [எஸ். ஶ்ரீனிவாச ராகவன்]
நம் நாட்டில் சாமியார்கள் பலர் உண்டு. பரதேசி முதல் ராஜகுரு வரை… மக்கள் மனங்களை எத்தனை விதமாகப் பிரிக்க முடியுமோ, அத்தனை விதமான சாமியார்களும் உண்டு. ஆனால் வெகுஜனங்களின் மனத்தில் சாமியார் பற்றிய பிம்பம் ஒரே மாதிரி தான். அவர் உணவு விருப்பம் துறந்தவராக இருக்க வேண்டும். பகட்டு துறந்தவராக இருக்க வேண்டும். சைவ பட்சிணியாக இருக்க வேண்டும். முக்கியமாக அவர் காமம் துறந்தவராக இருக்க வேண்டும். அத்தனை...
யதி – வாசகர் பார்வை 1 [உஷாந்தி கௌதமன்]
யதியின் முதலாவது அத்தியாயத்தில் ஒரு புதரைப் பற்றிய வர்ணனை வரும். ஒரு புதரில் வேறு வேறு செடிகள் எங்ஙனம் கிளைகளின் அடர்த்தியில் கூட சரியாகப் பிரிந்து இணைந்து ஒரே மரம் போல உருவாகியிருக்கும் என்று. இந்தக் கதையில் வருபவர்களும் அப்படித்தான். யாருக்குமே ஒருவரோடு ஒருவர் தொடர்பில்லை. ஆனாலும் ஒன்றே போல ஒரு நூற்பின்னல் கொண்டு இணைக்கப்பட்டிருப்பார்கள். மொத்தக் கதையும் நான்காவது சகோதரனான விமலின்...