இறுதிச் சடங்கு சிறுகதை சில விவாதங்களைக் கிளப்பியிருப்பதை அறிந்தேன். சிறுகதைகளைப் பொருட்படுத்தி விவாதிப்போர் இன்னும் இருப்பதே ஆசுவாசமளிக்கிறது.
நண்பர் ஆர்வி இந்தக் குறிப்பை அனுப்பியிருந்தார்.நண்பர்களின் கருத்துகளோடு உடன்படவோ முரண்படவோ நான் விரும்பவில்லை. நான் சொல்ல நினைத்தது இதனைத்தான் என்று மைக் பிடிப்பதைக் காட்டிலும் அவலம் வேறில்லை. வாசகர்களுக்கு ஒரே ஒரு குறிப்பை மட்டும் நான் தரலாம்.
இந்தக் கதையின் தலைப்பு – உள்ளே வருகிற ஒரு வரி – இறுதிச் சம்பவம் மூன்றையும் ஒரு நேர்க்கோட்டில் பிடித்தால் நான் சொல்ல வந்தது பிடிபட்டுவிடும்.
அப்படி அகப்படாமலே போனால்தான் என்ன? கதை என்பது கடைசி வரியில் இருப்பதல்ல.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.