Categoryஅனுபவம்

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 43)

இந்த அத்தியாயம், நம் சூனியனே நம்மிடம் கதை சொல்லுமாறு அமைக்கப்பட்டிருக்கிறது. வெகுநாட்களுக்குப் பிறகு நாம் சூனியனின் பார்வையில் கதை கேட்கிறோம். விறுவிறுப்பு குறையாமல் நகர்கிறது. அவனது யோக நித்திரையில் தொடங்குகிறது அத்தியாயம். அவன் ஆயிரமாயிரம் பிரதி பிம்பங்களைப் படைக்கிறான். அவனுக்காகப் போரிட போகின்றனர் எனவும் கூறுகிறான். அறிஞர்கள், அழகிகள், கவிஞர்கள், அரசியல்வாதிகள், சாதாரணர்கள், மல்லர்கள்...

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 45)

கோவிந்தசாமி மருத்துவமனையில் இருந்து இரவுராணி மலரைப் பறிக்கக் கிளம்பி பல அத்தியாயங்களாக மலரைப் பறிக்காமல் அங்குமிங்கும் அலைய வேண்டி இருந்தது. ஆனால் அன்று தற்செயலாக அவன் முன்னால் அந்த தடாகம் இருந்தது. இரவு ராணி மலர் இருந்தது. இனி அவனுக்கு தடையெதுவும் இருக்க முடியாது அல்லவா? அவன் சிரமப்பட்டான் என்பது உண்மைதான். சிலர் அவனை சிக்கலில் சிக்க வைத்தனர் என்பது உண்மைதான். ஆனால் அந்த சிக்கலெல்லாம் தீரும்...

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 42)

“சாகரிகா ரசிகர் வட்டம்” என்ற பெயரில் சமஸ்தானம் கட்டும் வேலைகளை ஆரம்பிக்க ஆயத்தமாகிறாள் சாகரிகா. கோவிந்தசாமியின் நிழலின் பெயரில் சமஸ்தானத்தின் பெயரைப் பதிவு செய்கிறாள். வேலைகள் மும்முரமாக நடக்கிறது. தன்னை துதிப்பதற்குத் தானே கட்டிக் கொண்ட சமஸ்தானம் எனபதில் சிறு சங்கடம் கொள்கிறாள் சாகரிகா. எழுத்தாளர் நற்குணசீலனின் செயல்பாடுகளைத் தனக்கு முன் மாதிரியாக எடுத்துக் கொள்கிறாள் சாகரிகா. அவள்...

கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 44)

”மங்கையினால் வரும் துக்கம் மதுவினில் கரையும்” என்ற எதார்த்தத்தைப் போல கோவிந்தசாமியும், அவன் நிழலும் மீண்டும் தன் துக்க சிந்தனைகளோடு சந்தித்துக் கொள்கிறார்கள். குடிக்க வந்திருக்கும் கோவிந்தசாமி தன் நிழலிடம், ”நீ குடிகாரன் ஆகிவிட்டாயா?” எனக் கேட்பது நகை முரண்! தேசியவாதியாய் தான் மது குடிப்பது சரியா? தவறா? என்ற தர்க்க வாதங்களுக்கிடையே தனக்கெதிராக கிளம்பும் பெண்கள், அவர்கள் எல்லோரும் தன்னை...

கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 43)

பிரம்மனுக்கு இணைவைக்க முடியாத தன் யோக நித்திரை குறித்து சூனியன் விளக்குகிறான். அவனின் விளக்கமே அரூப ரூபத்தை நமக்குள் ரூபமாய் காட்சிப்படுத்துகிறது. யோக நித்திரையில் பிரதி பிம்பங்களைப் படைத்துத் தள்ளுகிறான். பூமி பந்தில் உலாவித் திரியும் அத்தனை அடையாளங்களோடும் உலாவித் திரியும் சூனியனின் பிரதி பிம்பங்களின் செயல்பாட்டு வேகம் மட்டும் ”எந்திரன் சிட்டி” அளவுக்கு இருக்கிறது! தன் படைப்பின் அம்சத்தை...

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 41)

செம்மொழிப்ரியா பிரிந்து சென்றதில், நிழல் சற்று நேரம் புலம்பலுக்கு ஆளாகிறது. ஒரு நாள் காதல் என்றாலும் அந்தக் காதலின் வலிக்குச் சாராயத்தை நாடுகிறது நிழல். அங்கே நம் கோவிந்தசாமியும் தன் புண்பட்ட நெஞ்சை ஆல்கஹால் ஊற்றி ஆற்றி கொண்டிருக்கிறான். இருவருமாய் தங்கள் கஷ்டங்களை மிக்சரோடு பகிர்ந்து கொள்கின்றனர். இதற்கிடையில் வெண்பலகையில் ஒரு பெண், மனுஷின் கவிதைகளைத் தொட்டு கொண்டு குடிப்பதாக வந்த அறிக்கையைப்...

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 44)

கோவிந்தசாமியும் அவனது நிழலும் மறுபடியும் அந்த ஒயின்ஷாப்பில் சந்திக்கிறார்கள். அந்த ஒயின்ஷாப்பின் பெயரில் ஏதாவது குறியீடு இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால் குறியீடு எதுவும் இல்லாமல் நேரடியாக ஒரு விஷயம் கோவிந்தசாமி சொல்வதாக இப்படி சொல்லப்பட்டிருக்கிறது. “நான் குடிக்கிறேனே தவிர வேறு தப்புத்தண்டாவுக்கும் போனதே இல்லை. வேலைத் தூக்கிக் கொண்டு அலைந்ததும் இல்லை. காலை விரித்துக் கொண்டு கிடந்ததும்...

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 43)

சூனியன் யோகநித்திரையில் தனக்கான உலகை தானே நிர்மானிக்கிறான். அந்த உலகில் அனைத்துவித துறையினரும் இருக்கிறார்கள் தன் புத்தகத்துக்கு தானே விமர்சனம் எழுதும் இலக்கியவாதி உட்பட. தர்மேந்திர மகாப்ரபுவைப் பற்றி அவன் சொல்லும்போது எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது அவனது ரசிகர்கள் ஒருவேளை அவனுடன் சண்டைக்கு சென்றால் என்ன செய்வது என. ஆனால் அவனுடன் எப்படி அவர்கள் சண்டைக்கு போக முடியும்? அவன்தான் சூனியனாயிற்றே. அவன்...

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 42)

நீல வனத்தில் சமஸ்தானம் அமைப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் சாகரிகா செய்துகொண்டிருந்தாள். அந்த சமஸ்தானத்தின் ஒவ்வொரு பகுதியையும் அவள் பார்த்து பார்த்து செதுக்கிக் கொண்டிருந்தாள். அதற்கென பிரத்யேகமான ஆட்களை நியமித்து அவர்களை முடுக்கிவிட்டு கொண்டிருந்தாள். சமஸ்தானம் அவள் ரசிகர்களுக்காக ரசிகர்களே சேர்ந்து உருவாக்கியது போலவும் அதில் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லாதவாறு காட்டிக் கொள்வதாக ஏற்பாடு...

படைப்பாளி எனும் பேசுபொருள் – கோபி சரபோஜி

வாசிக்க வாங்குனவனுக ஆட்டயப் போட்டுட்டு போயிட்டானுகன்னு புலம்பாமல் முதன் முதலில் வந்த பதிப்பு நுல்கள் தற்போதைய விலையை விட குறைவாக இருக்கும். அவைகளைத் தேடிப் பார்த்து வேண்டிய நூல்களை வாங்கிக் கொள்.பணம் நான் தருகிறேன்” என நண்பர் சொல்லியிருந்தார். கரும்பு தின்னக்கூலியா? என்றாலும் ஏண்டா இந்த உறுதி மொழியைக் கொடுத்தோம்? என அவன் நினைத்து விடவும் கூடாது என்பதால் பார்த்து விட்டு சொல்கிறேன் என சொல்லி...

கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 42)

புவியில் தனக்கான சமஸ்தானத்தை அமைத்துக் கொண்டு நீலவனத்தில் குடியுரிமை பெற்றிருக்கும் தன் இரசிகர்கள் மூலம் வெண்பலகை வழியே அங்கும் தன் புகழை பரப்பச் செய்து வரும் எழுத்தாளர் நற்குணசீலனின் செயல்பாட்டையும், மாடலையும் தனக்கான முன் மாதிரியாக சாகரிகா எடுத்துக் கொள்கிறாள். நிழலை நம்பி ”சாகரிகா ரசிகர் வட்டம்” என்ற பெயரில் தனக்கான சமஸ்தானத்தை முறைப்படி அமைக்கிறாள். கோவிந்தசாமியின் நிழலுக்கு இருக்கும் தன்...

கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 41)

தன்னைக் காதல் வலை(சூழ்ச்சி)யில் வீழ்த்தி காரியம் முடிந்ததும் தூக்கியடிச்சிட்டு போனவளை பரிகாசிக்கவும் முடியாமல், காதலைத் துறக்கவும் முடியாமல் கலங்கிப் போன நிழல் காதலில் காயப்படுபவனின் கடைசிப் புகலிடமாய் இருக்கும் சாரயக்கடைக்கு வந்து சேர்கிறது. அங்கு கோவிந்தசாமியும் சரக்கடித்துக் கொண்டிருக்கிறான். பிரிந்தவர்கள் சந்தித்துக் கொள்கிறார்க்ள். சோகத்தின் வீரியம் குறைய இடைஇடையே பெக்கோடு ஏமாற்றங்களுக்கும்...

கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 40)

கோவிந்தசாமியின் நிழல் சாகரிகாவை தனதாக்கிக் கொள்ள கொண்டிருந்த விரதத்தைக் கைவிடுகிறது. தன் சிந்தனைக் கதவைத் திறந்து விட்ட ”காதலி”யைத் (செம்மொழிப்ரியா) தவிர தன் மனதில் எவருக்கும் இடமில்லை என சத்தியம் கொள்கிறது. உனக்காக நான் என் சாம்ராஜ்யத்தையே துறப்பேன் என்ற காதல் மொழியை தன் காதலியிடம் சொல்லி காதலை வெளிப்படுத்துகிரது. இதெல்லாம் கலியுகக் காதலில் சகஜம் தான்! தன் சொல்லுக்கு இயங்கும் சாட்டையாய் நிழலை...

கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 39)

நீலநகர நுழைவாயிலில் கழற்றி விட்ட கோவிந்தசாமியை நீலநகரவனத்தில் சூனியன் சந்திக்கிறான். அவரவர் பக்க நியாயங்களை சொல்லிக் கொள்கிறார்கள். வழக்கம் போல் சூனியனே தன் தரப்பை நிலை நிறுத்துகிறான். பா.ரா., கடவுள் என இருவரையும் நேரம் வாய்க்கும் போதெல்லாம் வறுத்தெடுக்கும் சூனியன் இப்போதும் விட்டு வைக்கவில்லை. சாகரிகாவுடன் நிழல் நட்பானது, நிழலுக்காக அவள் சமஸ்தானம் அமைத்துத் தர இருப்பது ஆகிய தகவல்களை சூனியன்...

கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 38)

நூலகத்திற்குள் நுழைந்த கோவிந்தசாமியின் கண்களில் பட்டுவிடக்கூடாது என சாகரிகா பதறுகிறாள். அதற்கு வழி சொல்லும் ஷில்பா நூலக அடுக்கில் புத்தகம் ஒன்றைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த கரடி ஒன்றின் முகத்தை திருகி சாகரிகாவுக்கு பொருத்தி விட்டு அவளின் முகத்தை தன் கைப்பைக்குள் வைத்துக் கொள்கிறாள். கோவிந்தசாமியை அடையாளம் கண்டு கொண்ட நூலகர் மூலம் வெண்பலகையில் தன் சல்லாப வீடியோ வெளியானதையும், நூலகத்திற்கு சாகரிகா...

கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 37)

நூலக சமஸ்தான வாசலை சாகரிகாவும், ஷில்பாவும் வந்தடைகிறார்கள். வாசலில் முதிர்ந்த யாளி ஒன்று மயங்கிக் கிடக்கிறது. யாளிகள் பற்றிய சுவராசியத் தகவல்களோடு அத்தியாயம் விரிகிறது. நூலகர் மூலம் சாகரிகாவை அடையாளும் கண்டு கொள்ளும் வனவாசிகள் அவளைச் சூழ்ந்து கொள்கிறார்கள். அழகுக் குறிப்பெல்லாம் பெற்றுக் கொள்கிறார்கள். வாசிக்கும் நமக்கும் அழகுக்குறிப்புகள் கிடைக்கிறது. வாய்ப்பிருப்பவர்கள் செயல்படுத்திப்...

கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 36)

இந்தத் தலைப்பை பா.ரா.விடம் நேரடியாக எவரேனும் சொன்னால் அதற்கு அவரின் எதிர்வினை எப்படியிருக்கும்? எனத் தெரியவில்லை. ஆனால், சூனியன் சர்வசாதாரணமாக சுழற்றி அடிக்கிறான். சத்தியசோதனை போல பா.ரா.வே தன்னைப் பற்றி மதிப்பிடும் சுயசோதனை போலும்! போகட்டும். இந்த அத்தியாயத்தில், தன் படைப்பாக்கத்தில் தனக்கு நிகர் தான் மட்டுமே! இந்த விசயத்தில் கடவுள் கூட என்னை நெருங்கமுடியாது என மார்தட்டும் சூனியன் ”மாற்றான்...

கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 35)

தான் திருப்பதி போய் வந்த சுவராசியப் பின்னனியோடு சகபயணிகளுக்கு தன்னிலை விளக்கமும், தான் வருவதற்கான நோக்கமும் குறித்து விளக்கியபடியே நீலநகரவனத்துக்குள் கோவிந்தசாமி நுழைகிறான். இரவு ராணி மலர் பூக்கும் தடாகம் தேடிக் கிளம்பும் கோவிந்தசாமியை தமிழ் அழகியும், முல்லைக் கொடியும் சந்திக்கும் போது அவர்களைப் பார்த்து ”சதிகாரிகள்” என அவன் அலற அவர்களோ அவனை மஜாஜ் மூலம் சாண்ட்விச்சாய் உருட்டி எடுக்கிறார்கள்...

கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 34)

செம்மொழிப்ரியாவின் வார்த்தை வசியத்தில் கோவிந்தசாமியின் நிழல் கரைய ஆரம்பிக்கிறது. சத்தியம் செய்யக் கூட சப்த நாடியும் ஒடுங்கும் இடத்தை சுட்டியிருப்பது உச்சம்! நிழல் செம்மொழிப்ரியாவிடம் சாகரிகாவை விரும்பியது உள்பட தன் கதையை விவரிக்கிறது. சாகரிகாவுக்காக உதவுவதற்கான திட்டம் குறித்தும் சொல்ல அந்த முனையில் நிழலின் மனதில் சந்தேக சலசலப்பை உருவாக்கி அதன் நோக்கத்தை திசை திருப்பி விடுகிறாள். கூடவே, மந்திர...

கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 33)

நீலநகர வடிவமைப்பில் காட்டிய வசீகரத்தை நீலநகர வனத்திலும் பா.ரா. விட்டு வைக்கவில்லை. தனித்தனி பிரிவாக இயங்கும் அலுவலகம் போல சமஸ்தானங்களை அமைத்து. அதில் பேய், பிசாசுக்கும் இடம் கொடுத்திருக்கிறார்! சூனியன் கொடுத்த அசைன்மெண்டை கையில் வைத்துக் கொண்டு கோவிந்தசாமியின் நிழலைத் தேடி வரும் செம்மொழிப்ரியா தடாகக் கரையோரத்தில் கண்டு பிடிக்கிறாள். மயக்கும் வார்த்தைகளில் நிழலைத் தன் வசப்படுத்த முனைகிறாள். அவனையே...

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive new posts by email.

தொகுப்பு

Links

Recent Posts

Join here

RSS Feeds

R.P. Sarathy

எழுத்துக் கல்வி