சூனியன் யோகநித்திரையில் தனக்கான உலகை தானே நிர்மானிக்கிறான். அந்த உலகில் அனைத்துவித துறையினரும் இருக்கிறார்கள் தன் புத்தகத்துக்கு தானே விமர்சனம் எழுதும் இலக்கியவாதி உட்பட.
தர்மேந்திர மகாப்ரபுவைப் பற்றி அவன் சொல்லும்போது எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது அவனது ரசிகர்கள் ஒருவேளை அவனுடன் சண்டைக்கு சென்றால் என்ன செய்வது என. ஆனால் அவனுடன் எப்படி அவர்கள் சண்டைக்கு போக முடியும்? அவன்தான் சூனியனாயிற்றே. அவன் பா.ரா.வையே உண்டு இல்லை என ஆக்கிக் கொண்டிருக்கிறான்.
“ஒரு தளுக்குக் காரியின் கடைக்கண் பார்வைக்காக தகிடுதத்தோம் செய்த ” ஒருவரின் வீடியோவை பார்த்த கையோடு அதே வார்த்தைகள் சூனியனின் வாயில் அதற்கு முன்பே வந்திருப்பது கண்டபோது எனக்கு ஆச்சர்யம்தான்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.