Fitna: ஓர் எதிர்வினை

அன்புள்ள பா.ரா,

மேற்படி பதிவில் ரொம்ப அப்பாவியாக இப்படி சொல்கிறீர்கள் –

// பிற கடவுள்களை வணங்குவோரைச் சுட்டிக்காட்டி மாணிக்கவாசகர் கலவரப் பீதியைத் தூண்டுவதோ நமக்கு ஒரு பொருட்டில்லையென்றால் மேற்படி சூராக்களையும் நாம் பெரிய அளவில் பொருட்படுத்தத் தேவையில்லை. //

தேவையில்லை தான்.. இஸ்லாம் என்கிற மதம் தான் சென்றவிடமில்லாம் பெரும் படுகொலைகளையும், பேரழிவுகளையும் *மதத்தின் பெயரால்* செய்யாமலே இருந்திருந்தால். அது *இன்றும்* தொடர்ந்து நடக்காமல் இருந்திருந்தால்.. போர்நடக்கும் ஈராக்குக்கு அடுத்தபடியாக, இஸ்லாமிய தீவிரவாதத்தில் அதிக குடிமக்களை பலிகொடுத்திருக்கும் ஒரு நாட்டில் வாழ்ந்துகொண்டு கொஞ்சம் கூட உணர்ச்சியில்லாமல் எப்படி சுவாமி உங்களுக்கு இப்படி எழுத வருக்கிறது? (பார்க்க )
சொற்கள் மட்டும் ஒரு கருத்தியலின் தாக்கத்தைத் தீர்மானிப்பதில்லை.. ஒரு மனிதன், மதம், சமூகம் அந்தச் சொற்களை உள்வாங்கித் தங்கள் வாழ்க்கையையும், அமைப்புகளையும் கட்டமைக்கும் விதமே அவற்றின் நடத்தையையும், செயல்முறைகளையும் தீர்மானிக்கிறது. “அஞ்சுமாறே” என்பதற்கும் “மாண்டனர்” எனபதற்கும் “அழிந்து போகிறான் (விநஷ்யதி)” என்பதற்கும் திருவவசகத்திலும், ராமானுஜ நூற்றந்தாதியிலும், கீதையிலும் அர்த்தமே வேறு. இந்த நூல்களின் தளமே வேறு. அது சுத்த ஆன்மிகம்…. இவை காஃபிர்களைக் கண்ட இடங்கலில் கொல்லப் போகிற முஃமீன்களான “நம்பிக்கையாளர்கள் கூட்டத்திடம்” பேசவில்லை, ஒரு தனிமனிதனின், ஆன்ம சாதகனின் மனத்துடன் பேசுகின்றன.. இதுவும் உங்களுக்குத் தெரியாததல்ல. மேலும், இந்த நூல்களினால் எத்தனை பாதகர்கள் உருவாகியிருக்கிறார்கள்? எத்தனை இனப்படுகொலைகள் நிகழ்ந்துள்ளன? வரலாற்று அறிஞரே, தயவு செய்து ஆதாரங்கள் தாருங்கள்.

ஆனால், இஸ்லாமின் ரத்தம் தோய்ந்த வரலாறு பற்றி வில் டுராண்ட் (அவரது பிரபலான மேற்கோளை மடல் முடிவில் தந்திருக்கிறேன்) முதல் இன்றைய கொய்ன்ராட் எல்ஸ்ட் வரை ஏராளமான வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். இன்றைய செய்தி ஊடகங்களும், அப்பட்டமாக நமக்கு இவற்றை அறிவித்துக் கொண்டிருக்கின்றன. இப்படியிருக்கும்போது “அந்தளவுக்கு அவர்கள் அடக்குமுறைக்கும் ஆதிக்கத்துக்கும் உட்பட்டிருக்கிறார்கள் என்பது தவிர எனக்கு வேறு காரணம் தெரியவில்லை” என்று ஜல்லியடிக்கிறீர்களே.. மத்தியக் கிழக்கு சரி, மற்ற நாடுகளின் இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு என்ன காரணம்?

பாகிஸ்தானிய, வங்கதேச இந்துக்கள் சந்தித்த அடக்குமுறை, ஆக்கிரமிப்புக்கள், கற்பழிப்புக்கள் கொஞ்சமா? நஞ்சமா? இத்தனைக்கும் இஸ்லாமிய ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு எந்தக் கலகமும் செய்யாமல், அதற்கு அடிபணிந்த வாழக் கூட இணங்கியவர்கள் அவர்கள்.. அவர்களை இன அழிப்பு செய்து, அவர்கள் சொந்த மண்ணை விட்டுத் துரத்திய இஸ்லாமிய” அராஜகத்திற்கு என்ன காரணம்? இந்த குரானிய சூராக்கள் என்பதைத் தவிர?

“புவியிலோரிடம்” போன்ற அற்புதப் படைப்பைத் தந்த நீங்கள், மனச்சாட்சியையும், முதுகெலும்புகையும் கழற்றிவைத்துவிட்டு எழுதியிருக்கிறீர்கள்.
வேதனையுடன்,
ஜடாயு
[வில் டுரான்ட் தனது “நாகரீகங்களின் வரலாறு” என்ற நூலில் கூறுகிறார்: “இந்தியாவை இஸ்லாமியர்கள் கைப்பற்றியது தான் உலக சரித்திரத்திலேயே அதிக அளவு ரத்தக்கறை படிந்த கதையாக இருக்கும். அது எவரையும் நிலைகுலையச் செய்யும் கதை. அதிலிருந்து தெளிவாகப் புரியும் பாடம் என்னவென்றால், கலாசாரம் என்பது ஒரு பெருமதிப்புள்ள பொருள். அதன் சிக்கலான, நுட்பமான ஒழுங்கும், சுதந்திரமும் வெளியிலிருந்து ஆக்கிரமிப்பவர்கள் மற்றும் அவர்கள் மூலம் உள்ளிருந்தே பல்கிப்பெருகுபவர்கள் என்ற இருவகைக் காட்டுமிராண்டிகளாலும் எந்நேரமும் தகர்த்தெறியப் படும் அபாயம் இருக்கிறது”.
“…the Islamic conquest of India is probably the bloodiest story in history. It is a discouraging tale, for its evident moral is that civilization is a precious good, whose delicate complex order and freedom can at any moment be overthrown by barbarians invading from without and multiplying from within “- – Will Durant in “History of Civilization”]

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி