துறையும் மொழியும்
அன்புள்ள பாரா,
டாலர் தேசம், மாயவலை, ஆயில் ரேகை போன்ற புத்தகங்கள் வழியேதான் நீங்கள் எனக்கு அறிமுகமானீர்கள். இதைப் போன்ற கனமான விஷயங்களைத் தமிழில் எளிமையாக எழுதவும் ஒரு ஆள் இருக்கிறாரே என்று உங்களுடைய ஒவ்வொரு புத்தகத்தைப் படிக்கும்போதும் வியந்து போயிருக்கிறேன். அன்சைஸ் படித்தபோது, இந்த மனிதர் இப்படியும் சிரிக்க சிரிக்க எழுதுகிறாரே என்று வியப்படைந்தேன். டாலர் தேசத்திலேயே உங்கள் நக்கல் பரிச்சயம் என்பதால் அதனைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் பொலிக பொலிக நிச்சயம் நான் எதிர்பார்க்காத ஒன்று. நீங்கள் இதற்குமுன் ஆன்மீகம் எழுதியிருக்கிறீர்களா? இந்தப் புத்தகத்தில் உள்ள மொழி உங்களுடைய மற்றப் புத்தகங்களில் இல்லவேயில்லை. இதை எழுதியது உண்மையிலேயே நீங்கள்தானா?
ஆ. குமரகுரு, துவாக்குடி