Multi Tasking பற்றிய பதிவைக் கண்டேன். அந்தக் கலையில் நான் பூச்சியம் என்கிறீர்கள். முற்று முழுதாக அப்படிச் சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை.
தத்துவங்களைத் தகர்த்தல்
மொழியைப் பழக்குவது என்பது நாய்-பூனையைப் பழக்குவது போன்றதல்ல. வீட்டில் ஒரு சிறுத்தை அல்லது சிங்கத்தைச் சோறு போட்டு வளர்ப்பது போன்றது.
நாவலும் மற்றதும்
நாவலின் கருப் பொருளுக்கேற்ப மொழி தன் முகத்தை மாற்றிக்கொள்ளும். அந்தந்த நாவல், தனக்குத் தேவையானதைத் தானே தேடிக்கொள்ளும்.
வட கொரியா, ஒரு கடிதம் – அப்துல்லா இப்னு நஸீர்
கம்யூனிசம் என்ற போர்வையை வட கொரியா போர்த்திக் கொண்டு இருப்பதெல்லாம் சோவியத்தின் மூலமாக நிதி ஆதரவை பெறுவதற்காகத்தானே தவிர கம்யூனிசத்திற்கான வாடையே இல்லாத நாடுதான் வட கொரியா.
அறுக்க மாட்டாதவன் – ஒரு கடிதம்
நம்மூரில் பணிச்சூழலியல் (ergonomics) என்றால் என்னவென்றே தெரியாது. தினம் பயன்படுத்தும் செருப்பில் மிச்சப்படுத்தி, என்றாவது ஒரே நாள் போடும் ஷூவுக்கு செலவு செய்து, கால்வலி வந்து பிஸியோதெரபிக்கு பல ஆயிரம் அழுவோம். இப்படி நாம் அன்றாடம் பயன்படுத்தும் நம் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் விஷயங்களை நாம் கவனிக்க வேண்டியதன் அவசியத்தை இவ்வளவு எளிதாக, அதே சமயம் வெளிப்படையாக யாரும் இது வரை எழுதியதில்லை. பா.ரா.வால்...
ஒரு கடிதம் – பொன் மகாலிங்கம்
அன்பின் பாரா, வணக்கம். குமுதம் டாட் காமில், பாக் ஒரு புதிரின் சரிதம் தொடராக வந்ததில் இருந்து உங்கள் எழுத்து எனக்கு அறிமுகம். பின்னர் டாலர் தேசம், நிலமெலாம் ரத்தம் என அது விரிந்தது. இன்றளவும் எனக்கு, அந்த இரண்டு புத்தகங்களும் உங்கள் படைப்பில் மிகப் பிடித்தமானவை. சக செய்தியாளர்களிடம், அதைப் படிக்கச் சொல்லி வற்புறுத்திக்கொண்டே இருப்பேன். அதையெல்லாம் தாண்டி, உங்களை எனக்கு மிகவும் அணுக்கமானவனாக உணரச்...
அலை உறங்கும் கடல் – ஒரு கடிதம்
வணக்கம் பாரா சார். என் பெயர் ஆனந்த். என்னைப் பற்றிய பெரிய அறிமுகம் ஏதுமில்லை. தங்களை முகநூலில் தொடர்கிறேன். அலை உறங்கும் கடல் பற்றி நீங்கள் பதிவிட்டபோது நீலுப்பாட்டியை சந்திக்க ஆவல் கொண்டேன். ஆனால் வெகு விரைவில் மறந்தும் போனேன். கிண்டிலில் இன்று தமிழ்ப் புத்தகங்களைத் தேடிய போது, இந்தப் புத்தகம் வந்தது. உடனே வாங்கினேன். கடலுக்குள் மூழ்கிப்போக ஆரம்பித்தேன். செவியின் கூர்மையைப் பொறுத்த சங்கீதம் என்ற...
ஒரு கடிதம் – கடுகு
அன்புள்ள பா.ரா அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீகள் என்று நம்புகிறேன். இங்கு நியூ ஜெர்சியில் இருக்கிறோம். இத்துடன் உள்ள படம் சற்று வித்தியாசமான முறையில், கிட்டத்தட்ட 100 Step-பில் போட்டோஷாப்பில் உருவாக்கியது. MONEY STYLE etched graphics என்கிறார்கள். பல நாள் முயற்சி செய்து செய்து ஓரளவு தேறிவிட்டேன். எழுத்தாளர்கள். அரசியல்வாதிகள், நடிக, நடிகையர், பாடகர்கள், பாடகிகள் என்று பலரை...
மாயவலை – ஒரு கடிதம்
திரு ராகவன் அவர்களுக்கு தங்களின் ’மாய வலை’யை சிலநாட்களுக்கு முன்னர் வாங்கினேன். உங்கள் எழுத்துக்களை நிறைய வாசித்திருக்கிறேன் அதில் உணவுப் பாரம்பரியம் குறித்த ஒரு நூலை பலநாட்கள் வைத்திருந்து குறிப்பெடுத்துகொண்டிருந்தேன். உங்கள் பெயரில் இந்த தலைப்பில் ஒரு புத்தகத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. நான் குமுதம் வாசிப்பதில்லை. அதனால் இது தொடராக வந்தது தெரியாமல் போய்விட்டது தலையணை சைஸில் புத்தகம் – ...
துறையும் மொழியும்
அன்புள்ள பாரா, டாலர் தேசம், மாயவலை, ஆயில் ரேகை போன்ற புத்தகங்கள் வழியேதான் நீங்கள் எனக்கு அறிமுகமானீர்கள். இதைப் போன்ற கனமான விஷயங்களைத் தமிழில் எளிமையாக எழுதவும் ஒரு ஆள் இருக்கிறாரே என்று உங்களுடைய ஒவ்வொரு புத்தகத்தைப் படிக்கும்போதும் வியந்து போயிருக்கிறேன். அன்சைஸ் படித்தபோது, இந்த மனிதர் இப்படியும் சிரிக்க சிரிக்க எழுதுகிறாரே என்று வியப்படைந்தேன். டாலர் தேசத்திலேயே உங்கள் நக்கல் பரிச்சயம்...
கமர்ஷியல் போராளியின் கஷ்ட காலக் குறிப்புகள் (1)
ரசிகர்கள் புத்திசாலிகள், வாசகர்கள் விவரமானவர்கள், நாம் எழுதுவதைப் பற்றிக்கொண்டு மேலேறிச் செல்லும் வல்லமை கொண்டவர்கள் என்றெல்லாம் என் சக எழுத்தாளர்கள் அவ்வப்போது தமது ரசிகக் கண்மணிகளைச் சிலாகிக்கும்போது எனக்குச் சற்றுப் பொறாமையாக இருக்கும். ஜெயமோகன் தினமும் வெளியிடும் வாசகர் கடிதங்களைப் பாருங்கள். அவர் சொல்வதில் பிழையே இல்லை. பலபேர் ஜெயமோகனையே விஞ்சுமளவுக்கு ஞானமரபு எக்ஸ்பர்ட்டுகளாக இருக்கிறார்கள்...
சில கடிதங்கள்
தினமலர் தேர்தல் களத்தில் நான் எழுதும் பத்திக்கு நிறைய மின்னஞ்சல்கள் வருகின்றன. இதில் எழுபது அல்லது எண்பது சதவீதம் பிரசுரிக்க இயலாதவை. நான் மட்டுமே படித்து ரசிப்பதற்காக எழுதப்படுபவை. அவை போக மிச்சமுள்ளவற்றில் சிலவற்றை இங்கே பிரசுரித்திருக்கிறேன். பொறுமையாக எடுத்துத் தொகுக்கவும் , பிழை திருத்தம் செய்யவும் நேரமில்லை. நண்பர்கள் தவறாக எண்ணவேண்டாம். இனி வரும் நாள்களில் மின்னஞ்சல்கள் வரும்போதே தனியே...
வாசிக்க பலகுபவனின் கேள்வி
வணக்கம். எனது பெயர்….. பொறியில் படித்துள்ளேன், வயது 27. என்னுடைய தாத்தா மூலம் வாசிக்க ஆரம்பித்தேன். பணியில் சேர்ந்த பிண்பு புத்தகங்களின் வாசிப்பு அதிகமாகியது. பொண்ணியின் செல்வன், மோகமுள் நாவல்களை வாசித்தபின்பு ஆர்வம் அதிகரித்தது. இரண்டு ஆண்டுகளாக சென்னை மற்றும் ஈரோடு புத்தக கண்காட்சியில் சில புத்தகங்களை வாங்கி வாசித்தேன். ஈரோட்டில் தற்போது நடந்துகொண்டிருக்கும் புத்தக கண்காட்சிக்கு போகும்...
ஒரு முத்தம் – ஒரு கடிதம்
அன்புள்ள பாரா, காலையில் கண் விழித்து அப்போதுதான் எழுந்து உட்கார்ந்திருந்தேன். பல் விளக்கியிருக்கவில்லை. அப்படியே மொபைலை ஒரு புரட்டு புரட்டலாம் என்று எடுத்தபோதுதான் உங்கள் சிறுகதையின் லிங்க் கண்ணில் பட்டது. அதைப் படிக்க ஆரம்பிக்கும்போது பின் வருமாறு இருந்தது என் மனநிலை: ஒரு இரண்டு பத்திகள் படிப்போம். சுவாரஸ்யமாக போகிறதா என்று பார்ப்போம். இல்லையெனில் ஃபேஸ்புக்கில் அடுத்த மொக்கை நிலைத்தகவலுக்குத்...
குற்றியலுலகத்தின் முகம்
அன்புள்ள பாரா, நான்கு பக்கத்தில் சொல்ல வேண்டியதை நாலு வரியில் சொல்கிறவன்தான் சிறந்த எழுத்தாளன் என்பது போல் நாற்பது வண்ணங்களை வைத்து விலாவரியாக வரைய வேண்டிய ஓவியத்தை நாலு கோடுபோட்டு கிறுக்கிச் சொல்பவன்தான் சிறந்த ஓவியம் என்பேன். முகம் என்ற தலைப்பிலான பேயோனின் ஓவியத்தைப் பார்த்தவுடன் அப்படித்தான் தோன்றியது. அதைப் பார்த்து “அட” என்று வியந்தவர்களில் நானும் ஒருவன். பேயோன் சாதாரண ஆளல்ல. அவர் ஒரு அறிவு...


