மறுபதிப்பு குறித்த ஒரு மறுபதிப்பு

எனது மாயவலை மறுபதிப்பு தயாராகிவிட்டது. புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வந்துவிடும். [மதிநிலையம் வெளியீடு].

750 முதல் 900 வரை நல்ல மார்க்கெட்டிலும் ஆயிரம் முதல் பத்தாயிரம் வரை கள்ள மார்க்கெட்டிலும் [பின்னது பிரதிகள் மட்டும்] விலை போய்க்கொண்டிருந்த இக்காவியமானது மக்கள் பதிப்பு – மலிவுப் பதிப்பாக வெறும் ரூ. 500க்கு கிடைக்கும் என்பது இனிக்கும் சேதி.

இவ்வினிப்புக்கு இனிப்பு சேர்க்க பதிப்பாளரானவர், மாயவலை வாங்குவோருக்கு குற்றியலுலகம் இலவசம் என்று வேறு அறிவித்துள்ளார். ஏ வாசக நல்லவனே, விரைந்து வா!

[இதே தகவல் இதே சொற்களில் பத்தி பிரிக்கப்படாமல் சிலேட்டில் முன்னதாக வெளியானது. எனவே இது ஒரு மறு பிரசுரம்.]
Share

4 comments

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி