ArchiveDecember 2017

ருசியியல் – முன்னுரை

பல வருடங்களுக்கு முன்பு குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் உணவின் வரலாறை ஒரு தொடராக எழுதினேன். மனிதன் முதல் முதலில் தேனை ருசித்துப் பார்த்த காலம் முதல் நவீன மனிதன் பீட்ஸா, பர்க்கரிடம் சரணடைந்த காலம் வரையிலான கதை. உணவைப் பற்றிப் பேச இவ்வளவு இருக்கிறதா என்று கேட்டார்கள். அந்தத் தொடர் கண்ட வெற்றி, பிறகு அது ஒரு தொலைக்காட்சி ஆவணப் படத் தொடராக மறு பிறப்பெடுக்க வழி செய்தது. சென்ற வருடம் தி இந்துவின் ஆசிரியர்...

புதிய புத்தகங்கள் – முன் வெளியீட்டுத் திட்டம்

ஜனவரி 2018 சென்னை புத்தகக் காட்சியில் என்னுடைய மூன்று நூல்களை கிழக்கு பதிப்பகம் வெளியிடுகிறது. 1. பூனைக்கதை – புதிய நாவல் 2. ருசியியல் – தி இந்துவில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு 3. சிமிழ்க்கடல் – பூனைக்கதைக்கு முன்பு நான் எழுதிய எட்டு நாவல்களின் பெருந்தொகுப்பு. இந்த மூன்று நூல்களின் மொத்த விலை ரூ. 1500. இதற்கு கிழக்கு முன் வெளியீட்டுத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. டிசம்பர்...

அஞ்சலி: ஜ.ரா. சுந்தரேசன்

அவர் சாமியாராகப் போன கதையை எத்தனை முறை அவரைச் சொல்ல வைத்துக் கேட்டிருப்பேனோ, கணக்கே கிடையாது. ‘நானும் ஆசைப்பட்டு அலைஞ்சிருக்கேன் சார். ஆனா நடக்கலை. நீ பொருந்தமாட்டன்னு தபஸ்யானந்தா சொல்லிட்டார் சார். அதைத்தான் தாங்கவே முடியலை’ என்று ஒரு சமயம் அவரிடம் சொன்னேன். ‘அவ்ளோதானா? பொருந்தமாட்டேன்னா சொன்னார்? தப்பாச்சே. ஓடிப்போயிடு; சன்னியாச ஆசிரமத்தையே நாறடிச்சிடுவேன்னு அடிச்சித் துரத்தியிருக்கணுமே’...

பூனைக்கதை

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு நாவலை எழுதி முடித்தேன். பூனைக்கதை. உண்மையில் நான் எழுத நினைத்ததும் எழுதத் தொடங்கியதும் வேறொரு நாவல்.  ‘யதி’ என்று பெயர். ஆறேழு மாதங்களாக அதில்தான் மூழ்கியிருந்தேன். தற்செயலாக ஒரு நாள் உறக்கத்தில், கனவில் அந்த நாவலுக்குள் புகுந்த ஒரு பூனை கணப் பொழுதில் பூதாகார வடிவமெடுத்து என் கதாநாயகனை விழுங்கிவிடும்போல் இருந்தது. அந்தப் பூனையை முதலில் நாவலில் இருந்து இறக்கி...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி