பல்லியொன்று மேலே
படுத்துக் கிடந்தது
நகரும் வழியாகக் காணோம்
உஸ் உஸ்ஸென்று சத்தமெழுப்பிப்
பார்த்தேன்; ம்ஹும்.
ஹேய், போவென்று
எழுந்து கையாட்டிப் பார்த்தேன்
அது காது கேளாத பல்லி
தட்டித் துரத்த தடியேதும்
அருகில் இல்லை
தானே நகரவும் அதற்கு வழி
தெரியவில்லை
எந்தக் கணம் தவறி விழும் என்ற
அச்சத்தில்
டாய்லெட் சரியாகப் போகவில்லை
பல்லிவிழும் பலனில் உச்சந்தலைக்கு
நல்லதாக ஏதுமில்லை
பாதியில் எழ வழியின்றி
மீதியை முடிக்க வகையின்றி
இந்தக் காலை இப்படியாகப் போனதில்
ரொம்பக் கோபம்
ஒரு பக்கெட் தண்ணீர் பிடித்து
உயரத் தூக்கி அடித்தேன்
நகர்ந்த பல்லி அமர்ந்துகொண்டதிக்
கவிதைபோன்ற கக்
கூஸில்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.