Blog

விலகியிருத்தல்

சில தினங்களாக நண்பர்கள் பலர் அடிக்கடி நலம் விசாரிக்கிறார்கள். உடம்புக்கு ஒண்ணும் இல்லியே? ஏன், நல்லாத்தான் இருக்கேன். ஃபேஸ்புக்ல காணமேன்னு கேட்டேன். உண்மையில், மணிப்பூர் கலவரம் புத்தகத்துக்கான எழுத்துப் பணி தொடங்கியதில் இருந்து என் அன்றாட ஒழுங்கு அல்லது ஒழுங்கின்மை முற்றிலும் மாறிவிட்டது.  முன்போல இப்போதெல்லாம் இரவு நெடுநேரம் கண் விழித்து எழுத முடிவதில்லை என்பதால் பகலிலும் சிறிது நேரம் வேலை செய்ய...

தீபாவளி மலர்கள்

இந்த ஆண்டு விகடன், லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்களுக்கு எழுதியிருக்கிறேன். விகடனில் ஒரு நகைச்சுவைக் கட்டுரை. லேடீஸ் ஸ்பெஷலில் ஒரு சிறுகதை. தொடர்ந்து அரசியலே எழுதிக்கொண்டிருப்பதால் சிறிது மூச்சுவிட்டுக் கொள்ளவும் வேண்டுமல்லவா? ஒரு காலத்தில் தீபாவளி மலரில் எழுதுவது என்பது தீபாவளியினும் பெரிய பண்டிகையாகக் கொண்டாடப்படும். மலரில் ஒரு துணுக்கு வெளியானால்கூட இனிப்பு அளித்துக் கொண்டாடியவர்களை அறிவேன்...

ஸ்ருதி பாலமுரளி

யூட்யூபில் ஸ்ருதி பாலமுரளி என்ற பெண்ணின் சானலை இப்போதெல்லாம் அடிக்கடி திறக்கிறேன். இவர் யார், இப்போது எங்கே இருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் கனடாவில் ஏதோ ஒரு பல்கலைக் கழகத்தில் படித்திருக்கிறார் என்று அவரது லிங்க்ட் இன் ப்ரொஃபைல் சொல்கிறது. எங்காவது வேலை பார்ப்பவராகவும் இருக்க வேண்டும். ஆனால் யூட்யூபில் இவர் காட்டும் முகம் முற்றிலும் வேறு. முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றிருக்க...

ஒரு நாள், ஒரு பண்டிகை

நண்பர்கள் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை வாழ்த்துகள். ஓர் இறை நம்பிக்கையாளனாக, செயல்கள் அனைத்தையும் என்னால் அறிய முடியாத ஒரு பெரும் சக்தி கண்காணித்துக்கொண்டிருப்பதாகவே எப்போதும் நினைப்பேன். தெரியாமல் எந்தத் தவறும் செய்வதில்லை. தெரிந்து செய்யும் தருணங்கள் வராதிருந்ததில்லை. தவறிழைக்கும்போதும் மனத்துக்குள் என் கடவுளுக்குத் தெரிவித்துவிட்டுத்தான் ஆரம்பிக்கிறேன். மன்னித்துவிடு என்று கேளாமல் இருப்பதில்லை...

கணை ஏவு காலம் – புதிய தொடர்

இந்து தமிழ் திசை நாளிதழில் கணை ஏவு காலம் என்ற புதிய தொடரை ஆரம்பித்திருக்கிறேன். ஹமாஸ்-இஸ்ரேல் இடையே தொடங்கியிருக்கும் போரினை முன்வைத்து இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்னையின் நவீன கால வரலாற்றைப் பேசுகிற தொடர் இது. தினமும் வெளியாகும். 2004ம் ஆண்டு முதல் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் இதே இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்னையின் வரலாற்றைப் பேசும் ‘நிலமெல்லாம் ரத்தம்’ தொடரை எழுதினேன். இரண்டாண்டு காலம் வெளியான அத்தொடர்...

மணிப்பூர் கலவரம் – புத்தக மதிப்புரை: கார்த்திகேயன் வெங்கட்ராமன்

கடந்த மே மாதம் மணிப்பூர் மாநிலத்தில் கலவரங்கள் துவங்கிய பொழுது செய்தித்தாள்களில் அது தொடர்பான செய்திகளை வாசித்ததுண்டு. அப்போதெல்லாம் அந்தக் இனக் குழுவின் பெயரை எப்படி உச்சரிப்பது? மீட்டியா, மீத்தீயா? அல்லது மெய்ட்டியா என்பதிலேயே எனக்கு குழப்பம் இருந்தது. அதுபோக ஒரு குழுவுக்கு ஆதரவான மாநிலத்தின் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மற்றொரு குழு போராட்டம் நடத்துகிறது என்ற அளவில்தான் எனது அடிப்படைப்...

ஆட்டோகிராஃப்

பொதுவாக எழுத்தாளர்களுக்குக் கிளுகிளுப்பு தரக்கூடிய சில விஷயங்களுள் ஒன்று, புத்தகங்களில் கையெழுத்திடுவது.  எழுதத் தொடங்கி, பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு அந்த மகிழ்ச்சி அருளப்பட்டது. மறக்கவே முடியாது. 2005 சென்னை புத்தகக் காட்சியில் டாலர் தேசம் வெளியாகியிருந்த நேரம். ஒவ்வொரு நாளும் குறைந்தது இருபது முதல் நாற்பது கையெழுத்துகள் போடுவேன். அவ்வளவு பேர் நம்மை விரும்புகிறார்கள், நம் எழுத்தை...

போஸ்டர்

சக்தி ஜோதி என்ற சகோதரி நேற்று இந்தப் படத்தை அனுப்பியிருந்தார். நிலக்கோட்டையில் இருந்து ஐயம்பாளையம் வரை இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதாகச் சொன்னார். மதுரையில் வசிக்கும் மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர், நண்பர் மதுசூதனன் நிலக்கோட்டையிலேயே வசிக்கும் அவரது நண்பரைத் தொடர்புகொண்டு மேலும் சில படங்களும் ஒரு விடியோவும் எடுத்து அனுப்பியிருந்தார். எழுதுபவனைத் தவிர வேறு யாருக்கும் இந்த முகமறியா அன்பெல்லாம்...

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!