கடையில் இல்லை, ஆன்லைனில் இல்லை, மின் நூலாக இல்லை, பதிப்பில் உள்ளதா, உங்களிடம் பிரதி கிடைக்குமா – என் புத்தகங்களைக் குறித்து சில காலமாகத் தொடர்ந்து என்னிடம் கேட்கப்பட்டு வருகிற இவ்வினாக்களுக்கு இங்கே விடை.
இனி என்னுடைய அனைத்து நூல்களும் கிழக்கு பதிப்பகம் வாயிலாக வெளியிடப்படும். எப்போதும் அச்சில் இருக்கும். மிக விரைவில் மின் நூல்களாகவும் கிட்டும்.
இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. ஜனவரி 2017 சென்னை புத்தகக் காட்சியில் கிழக்கு அரங்கில் வழக்கம்போல் இனி என் புத்தகங்களை நீங்கள் காணலாம், வாங்கலாம்.
முதல் கட்டமாக நான்கு புத்தகங்கள் இப்போது கிட்டத்தட்ட தயாராகிவிட்டன. மிக விரைவில் கிழக்கு மறுபதிப்பாக இவை வெளிவரும். தொடர்ந்து மற்றவை.
மேல் விவரங்களுக்கு பிரசன்னாவைப் பிடியுங்கள். அல்லது மருதன்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.