கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 8)

இந்த கோவிந்தசாமி இருக்கிறானே அவன் தனது நிழலை சூனியனுடன் அனுப்பிவிட்டு அவர்கள் திரும்ப வருவதற்காகக் காத்திருக்கிறான்.
அதற்குள் நாமும் அவர்களுடன் சென்று அந்த நகரைப்பற்றி ஒருசில விஷயங்கள் தெரிந்துவந்து விட்டோம். ஆனாலும் இன்னும் அந்நகரைப்பற்றி எதுவும் புரியாமல் சுற்றிவந்து கொண்டிருக்கும் அவனை நினைத்தால் கொஞ்சம் பாவமாக இருக்கிறது.
அதிலும் அந்த வெள்ளைநிறப் பலகையில் வரும் தகவல்களெல்லாம் தன்னைப் பற்றியதுதான் என்பது அவனுக்குத் தெரியவாய்ப்பேயில்லை.
அந்த நகரத்து மாந்தர்களின் மாற்றம் அவனுள் வியப்பை ஏற்படுத்தினாலும் அதை அவன் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. அந்த மாறுதலுடன் அவன் மனைவியை அவன் சந்திக்கும்போது அவனது எதிர்வினை எப்படி இருக்கும் என தெரிந்துகொள்ளும் ஆவல் வருகிறது.
ஒரு சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டு அதன் பின்னால் சென்று அவன் செய்த முட்டாள்தனங்களால் அவனை வெறுத்து அவனைவிட்டு நீங்கிய அவனது மனைவி அவனைவிட
பாவம்தான்.
இந்த அத்தியாயத்தின் இறுதியில் அவளைப்பற்றி ஒரு சிறுதகவல் அவனுக்கு கிடைக்கிறது. அதை வைத்து அவன் என்ன செய்யப்போகிறான்?
சூனியனும் நிழலும் என்ன ஆனார்கள்? என்பதெல்லாம் அறிய காத்திருப்போம்.
Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி