ஷில்பாவுக்காக காத்திருப்பதா சாகரிகாவைத் தேடிப்போவதா என அவன் குழம்புகையில் நகரவாசி ஒருவன் மூலமாக முகக்கொட்டகை பற்றி அறிகிறான்.
விதவிதமான முகங்கள் அங்கே கிடைக்கும் அதைவைத்து அவனது பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முனைகிறான். அங்கே உள்ள முகங்கள் எல்லாம் அங்கே வாழ்ந்து இறந்துபோன மனிதர்களின் முகமாம்.
நாம் மாஸ்க் எடுத்து முகத்தில் பொருத்திக் கொள்வது போல நாம் தேர்ந்தெடுக்கும் முகத்தை நம் தலையில் சுலபமாக பொருத்திக் கொள்ள முடியும் போலிருக்கிறது.
அங்கே இருக்கும் விதவிதமான முகங்களைக் கொண்டிருந்த மனிதர்களைக் குறிப்பிடும் போது அவர் நம் உலகத்தில் வாழ்ந்த யாரையோ குறிப்பிடுகிறார் என அறிய முடிகிறது. என்னால் யூகிக்க முடியவில்லை.
அவன் அதிலும் பேராசை கொண்டவனாய் நான்கு முகங்களைத் தேர்ந்தெடுத்து அதில் ஒன்றைப் பொருத்தி தான் எடுத்த காரியத்தில் வெல்கிறான்.
அடுத்து என்ன? காத்திருப்போம்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.