சூனியனுக்கு, பாராவின் மீது கடுங்கோபம் பொங்கி வழிகிறது. தன்னுடைய கதையைப் பாரா திசைத்திருப்ப முயல்வதாக எண்ணுகிறான்.
முகத்தை மாற்றிய கோவிந்தசாமி வெண்பலகையில் சாகரிகாவிற்கு ஒரு கவிதை(?!) எழுதுகிறான். அடடே! என்ன ஒரு
அருமையான
கவிதை, இதை படித்திருந்தால் சாகரிகா உடனே கோவிந்தசாமியோடு சேர்ந்திருப்பாள். அடுத்து அவன் எழுதும் பதிவை ஒரு நூற்று இருபது பேர் பகிரவும் செய்கிறார்கள். சூனியனும், நிழலும் அதிர்ச்சி அடைவதோடு அல்லாமல், ஒருவர் “வாசிக்கத் தூண்டும் சிறப்பான பதிவு,அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்”
என்று கருத்து கூறியதைப் படித்தவுடன் நிழல் அழவே தொடங்கிவிடுகிறது.
இதற்கு இடையில் சூனியன் வேறு தனது மாயா வினோத அர்த்த ஜாலங்களைக் கொண்டு நிழலைக் கட்டுக்குள் வைக்க முயல்கிறான்.அதில் ஓரளவு வெற்றியும் காண்கிறான்.
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.